Actress Tamannaah: 'உண்மையை உணர இத்தனை வருஷம் ஆச்சு.. இனி தான் என்வேலையை காட்டப் போகிறேன்..'- தமன்னா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Tamannaah: 'உண்மையை உணர இத்தனை வருஷம் ஆச்சு.. இனி தான் என்வேலையை காட்டப் போகிறேன்..'- தமன்னா

Actress Tamannaah: 'உண்மையை உணர இத்தனை வருஷம் ஆச்சு.. இனி தான் என்வேலையை காட்டப் போகிறேன்..'- தமன்னா

Malavica Natarajan HT Tamil
Published Mar 29, 2025 07:18 PM IST

Actress Tamannaah: நடிகை தமன்னா திரையுலகில் கால்பதித்து 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தான் இப்போது தான் உண்மையாக என் கெரியரை தொடங்கி இருக்கிறேன் எனக் கூறுகிறார்.

Actress Tamannaah: 'உண்மையை உணர இத்தனை வருஷம் ஆச்சு.. இனி தான் என்வேலையை காட்டப் போகிறேன்..'- தமன்னா
Actress Tamannaah: 'உண்மையை உணர இத்தனை வருஷம் ஆச்சு.. இனி தான் என்வேலையை காட்டப் போகிறேன்..'- தமன்னா

மறக்க முடியாதது

இந்த 2 முக்கிய தருணங்கள் குறித்தும் நடிகை தமன்னா தனது கருத்துகளைப் லக்மே ஃபேஷன் வீக் X FDCI இல் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய தமன்னா, "

நடிகை தமன்னா இந்த ஆண்டு 'பாகுபலி: தி பிகினிங்' திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தப் படம் இந்திய சினிமா வரலாற்றில் 'மறக்க முடியாத' அத்தியாயமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

பாகுபலி அவந்திகா

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இந்தப் பான் இந்திய சூப்பர் ஹிட் 'பாகுபலி' திரைப்படத்தின் முதல் பாகம், 2015 ஜூலை 10 அன்று பிரபாஸ் நாயகனாக நடித்து வெளியானது. இது தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி ஹிந்தியில் ஹிட் அடித்தது. பின் உலகளவில் பேசப்பட்ட படமாக மாறியது.

இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த கற்பனை படத்தில் வல்லமை மிக்க போர்வீரர் அவந்திகா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது மட்டுமல்லாமல் அதைவிட அதிகமாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

சிறப்பு வாய்ந்த படம்

"'பாகுபலி' என்பது எங்களுக்கு நிகழ்ந்த ஒரு மாயாஜால திரைப்படம். அந்தத் திரைப்படம் என்ன செய்யப் போகிறது என்று எங்களில் யாரும் கற்பனை செய்து பார்க்கவோ அல்லது எதிர்பார்க்கவோ முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் அது எங்களுக்காக மட்டுமல்ல, நாடு மற்றும் திரைப்படத் துறைக்கும் செய்தது மறக்க முடியாததும் வரலாற்று சிறப்புமிக்கதுமான ஒன்று," என்றார்.

இதுதான் தொடக்கம்

இந்த ஆண்டு தமன்னாவுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது, ஏனெனில் அவர் திரைப்படத் துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான 'சந்த் சா ரோஷன் செஹ்ரா' என்ற ஹிந்தித் திரைப்படத்தின் மூலம் அவர் நடிப்புத் துறையில் அறிமுகமானார்.

தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படத் துறைகளில் 'ஹேப்பி டேஸ்', 'கல்லூரி', 'தேவி', 'அரண்மனை 4' மற்றும் விரைவில் வெளியாக உள்ள 'ஒடெலா 2' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள 35 வயதான இந்த நடிகை, தான் இப்போதுதான் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருப்பதாகக் கூறுகிறார்.

சிறப்பானதை காட்டுதவேன்

"உண்மையில், படைப்பாற்றல் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ள 20 ஆண்டுகள் ஆகும். என் விஷயத்தில், இது உண்மைதான், ஏனென்றால் நான் மிகவும் இளம் வயதில் என் கெரியரைத் தொடங்கினேன். ஆநால், நான் இப்போதுதான் சரியாகத் தொடங்கியிருக்கிறேன் என்று உண்மையாக உணர்கிறேன், மேலும் ஒவ்வொரு நாளையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றி, பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் பார்க்க சிறப்பான ஒன்றை வழங்கப் போகிறேன்," என்றார்.

ராம்ப் வாக்

பின் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரபல வடிவமைப்பாளர் ஜோடி பால்குனி ஷேன் பீகாக் மற்றும் திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹருடன் தமன்னா ராம்ப் வாக் செய்தார். இதில் அவருக்காக வடிவமைத்த ஆடைகளையும் பாராட்டினார்.