குத்தாட்டம் போட மட்டும் தான் நானா? நடிகை தமன்னா வருத்தம்! என்ன சொன்னார் தெரியுமா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  குத்தாட்டம் போட மட்டும் தான் நானா? நடிகை தமன்னா வருத்தம்! என்ன சொன்னார் தெரியுமா!

குத்தாட்டம் போட மட்டும் தான் நானா? நடிகை தமன்னா வருத்தம்! என்ன சொன்னார் தெரியுமா!

Suguna Devi P HT Tamil
Published Dec 04, 2024 02:14 PM IST

தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, இந்தி மற்றும் பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா, இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து வருகிறார்.

குத்தாட்டம் போட மட்டும் தான் நானா? நடிகை தமன்னா வருத்தம்! என்ன சொன்னார் தெரியுமா!
குத்தாட்டம் போட மட்டும் தான் நானா? நடிகை தமன்னா வருத்தம்! என்ன சொன்னார் தெரியுமா!

 இவரது சிறந்த நடிப்பாலும் நடனத்தாலும் தமிழ் மற்றும் தெலுஙு என பல மொழிகளில் பல ரசிகர்களை கவர்ந்து உள்ளார். மேலும் தெலுங்கு, இந்தி என பல இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கி, நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் ”காவாலயா” பாடலுக்கு தமன்னா நடனமாடி இருந்தார். மேலும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான அரண்மனை 4 படத்திலும் இறுதியாக அச்சோ அச்சோ என்ற பாடலில் நடனம் ஆடி இருந்தார். இப்படமும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தது. 

நடனம் ஆடினால் வசூல் அள்ளும்

 இவரது நடனமும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என கூறப்பட்டு வந்தது. மேலும் சமீபத்தில் ஸ்திரி 2 என்ற இந்தி படத்திலும் ஆஜ் கிராத் என்ற குத்து பாடலில் தமன்னா நடனமாடி இருந்தார். தற்போது இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் தமன்னாவின் நடனம் இடம்பெற்றால் அந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் எனவும் கோடிக்கணக்கில் வசூல் பெறும் எனவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

 இதன் காரணத்தால் அனைவரும் தமன்னாவிடம் அவர்களது படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுமாறு கேட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான தமன்னா நான் நடனமாட மட்டும்தான் என கூறியுள்ளார் நான் ஆடிய ஒரு பாடல் ஒரு படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் அதற்காக நான் குத்தாட்ட நடிகை என்ற ரீதியில் அடுத்தடுத்த படங்களில் என்னை நடனமாட சொன்னால் எப்படி அது முடியும் ஜெயிலர் ரஜினி படம் என்பதனால் முதலில் நடனம் ஆடி இருந்தேன். மேலும் படத்தின் ஸ்திரி 2 படத்தின் இயக்குனர் அமல் கௌசி எனது நண்பர் என்பதால் அவர் கேட்டதும் மறுக்க முடியாமல் ஆடி இருந்தேன். தொடர்ந்து இதே போல பாடல்களில் மட்டும் நடனம் ஆடிக் கொண்டிருந்தால் என்ன செய்வது, நான் ஒன்றும் குத்தாட்ட நடிகை இல்லை ” எனவும் கூறி இவ்வாறு கேட்பவர்களால் வருத்தம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.