குத்தாட்டம் போட மட்டும் தான் நானா? நடிகை தமன்னா வருத்தம்! என்ன சொன்னார் தெரியுமா!
தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, இந்தி மற்றும் பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா, இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து வருகிறார்.

தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, இந்தி மற்றும் பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா, இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா, அதனை தொடர்ந்து கல்லூரி, பையா என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவரது சிறந்த நடிப்பாலும் நடனத்தாலும் தமிழ் மற்றும் தெலுஙு என பல மொழிகளில் பல ரசிகர்களை கவர்ந்து உள்ளார். மேலும் தெலுங்கு, இந்தி என பல இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கி, நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் ”காவாலயா” பாடலுக்கு தமன்னா நடனமாடி இருந்தார். மேலும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான அரண்மனை 4 படத்திலும் இறுதியாக அச்சோ அச்சோ என்ற பாடலில் நடனம் ஆடி இருந்தார். இப்படமும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தது.
நடனம் ஆடினால் வசூல் அள்ளும்
இவரது நடனமும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என கூறப்பட்டு வந்தது. மேலும் சமீபத்தில் ஸ்திரி 2 என்ற இந்தி படத்திலும் ஆஜ் கிராத் என்ற குத்து பாடலில் தமன்னா நடனமாடி இருந்தார். தற்போது இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் தமன்னாவின் நடனம் இடம்பெற்றால் அந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் எனவும் கோடிக்கணக்கில் வசூல் பெறும் எனவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.