Actress Sona: 'பிரச்சன முடியலன்னா தினமும் வருவேன்'.. பெப்சி அமைப்பை கண்டித்து தர்ணாவில் குதித்த நடிகை சோனா..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Sona: 'பிரச்சன முடியலன்னா தினமும் வருவேன்'.. பெப்சி அமைப்பை கண்டித்து தர்ணாவில் குதித்த நடிகை சோனா..

Actress Sona: 'பிரச்சன முடியலன்னா தினமும் வருவேன்'.. பெப்சி அமைப்பை கண்டித்து தர்ணாவில் குதித்த நடிகை சோனா..

Malavica Natarajan HT Tamil
Published Mar 24, 2025 03:47 PM IST

Actress Sona: நடிகை சோனா, தன்னை ஏமாற்றிவிட்டு சென்ற மேனஜரிடமிருந்து என் பணம், ஹார்ட் டிஸ்க் எல்லாம் திரும்ப கிடைக்கும் வரை போராட உள்ளதாக பெப்சி அமைப்பு முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

Actress Sona: 'பிரச்சன முடியலன்னா தினமும் வருவேன்'.. பெப்சி அமைப்பை கண்டித்து தர்ணாவில் குதித்த நடிகை சோனா..
Actress Sona: 'பிரச்சன முடியலன்னா தினமும் வருவேன்'.. பெப்சி அமைப்பை கண்டித்து தர்ணாவில் குதித்த நடிகை சோனா..

திடீர் தர்ணா

இந்நிலையில், படம் ஆரம்பிக்கும் போதே பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக பேசி வந்த அவர், இன்று திடீரென பெப்சி அமைப்பின் கட்டிடத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க், தன்னை ஏமாற்றி பறித்த சுமார் 8 லட்ச ரூபாயை கொடுக்கும் வரை இதே இடத்தில் தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

என்னோட போன எடுக்கல

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சோனா, "இதை எல்லாம் நான் தர்ணான்னே சொல்ல மாட்டேன். எனக்கு என்னோட வேலை நடக்க மாட்டிங்குது. ஒரு வருஷமா நானும் என்னென்னமோ பண்ணி பாத்துட்டேன். போன ஜனவரில மேனேஜர் ஒருத்தர் ஏமாத்திட்டாரு. ஒரு மாசம் நானே சமாளிச்சுக்கலாம்ன்னு பாத்தேன். முடியல. அதுக்கு அப்புறம் பெப்சில வந்து கம்ப்ளையண்ட் பண்ணேன். மேனேஜர் அசோசியேஷன்ல கம்ப்ளையண்ட் பண்ணேன். என்னால முடிஞ்சதெல்லாம் பண்ணேன். 2நாள் நல்லா பேசுறாங்க. 3வது நாள் என் போனையே எடுக்க மாட்டிங்குறாங்க. இல்ல என்ன மதிக்க மாட்டிங்குறாங்க.

8 மணிக்கு மேல ஆளு அனுப்புறாங்க

இதே மேனேஜர் அசோசியேஷன்ல என்னோட மேனேஜர் ஏமாத்திட்டான்னு சொன்னேன். அத அவங்களும் ஒத்துகிட்ட பிறகு, எந்த டெக்னீசியன்ஸ்க்கு எல்லாம் சம்பளம் போடலையோ அவங்கள எல்லாம் நைட் 8 மணிக்கு மேல வீட்டிக்கு அனுப்புறாங்க. நான் தனியா இருக்க ஆளு. என் வீட்டுக்கு நைட் 8 மணிக்கு மேல் வந்து கத்துறது சண்ட போடுறதுன்னு இருக்காங்க. இதை எல்லாம் ஒவ்வொன்னா சமாளிச்சிட்டு வந்தேன். இப்போ ஹார்ட் டிஸ்க்க புடுங்கி வச்சிட்டு தரமாட்டிங்குறாங்க.

இத்தனை நாளா போராடிட்டேன்

இங்க என்ன பிரச்சனைன்னே எனக்கு தெரியல. நான் என்ன பண்ணேன்னு கூட எனக்கு தெரியல. நான் ஒரு படம் எடுத்தேன். அத எடுத்ததுல இருந்தே பிரச்சன. படம் எடுத்துட்டு இதெல்லாம் என் குடும்பம்ன்னு தான் நெனச்சிட்டு இங்க தான் வந்து நின்னேன். என்னோட படத்தோட ஹார்ட் டிஸ்க்க எடுத்து வச்சிட்டு ஆளு மாத்தி ஆளு என்ன கேள்வி கேக்குறாங்க. இவங்க அத்தனை பேரும் பேதுறத நான் ஏன் கேக்கனும். இத்தனை நாளா இவங்களோட போராடிட்டேன். இதுக்கு மேல எதுவும் இல்ல.

எனக்கு படம் ரிலீஸ் ஆகணும்

நான் ஏமாந்துட்டேன்னு தெரியரதுக்கு முன்னாடி எல்லாம் ஒழுங்கா பதில் சொன்னாங்க. மேனேஜர் என்ன ஏமாத்துனத கண்டுபிடிச்சதும் எல்லா இடத்துல இருந்தும் திட்டுறாங்க. இன்னைக்கு கூட ஆபிஸ்ல இருக்க லேடி என்ன இங்க உக்கார கூடாதுன்னு திட்டுனாங்க. நான் இங்க தான் இருப்பேன். வேற எங்க நான் போறது. எனக்கு என்னோட படம் ரிலீஸ் ஆகணும். என்னோட பணம் ஹார்ட் டிஸ்க் எல்லாம் உ்ளள லாக் ஆகிடுச்சு . எனக்கு என் படம் ரிலீஸ் ஆகனும் அவ்ளோ தான்.

தினமும் வருவேன்

எனக்கு இங்க ஷங்கர்ன்னு ஒரு மேனஜர் வந்தாகணும். அவரும் எழுதி கொடுத்திருக்காரு நான் ஏமாத்திட்டேன்னு. இவங்களும் ஒத்துக்கிட்டாங்க. அப்படி இருக்கும் போது எதுக்கு எல்லாரும் சேர்ந்து அவர பாதுகாக்குறாங்கன்னு எனக்கு தெரியல. எனக்கு என்னோட ஹார்ட் டிஸ்க் வேணும். என்ன ஏமாத்திட்டு போன 8 லட்சம் திரும்ப வரணும்.

எனக்கு இந்த பிரச்சனை இன்னைக்கு முடியலையா நைட்டு வீட்டுக்கு போயிட்டு தூங்கிட்டு காலையில இங்க திரும்ப வந்திடுவேன். என் பிரச்சனை முடியுற வரைக்கும் இப்டி தான் பண்ணுவேன் என்றார்.