‘அவ்வளவு பஞ்சாயத்த பாத்தாச்சு.. கதறி கெஞ்சினேன்.. வேணாம் என்ன பேச வச்சிராதீங்க’ -நடிகை சோனா பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அவ்வளவு பஞ்சாயத்த பாத்தாச்சு.. கதறி கெஞ்சினேன்.. வேணாம் என்ன பேச வச்சிராதீங்க’ -நடிகை சோனா பேட்டி!

‘அவ்வளவு பஞ்சாயத்த பாத்தாச்சு.. கதறி கெஞ்சினேன்.. வேணாம் என்ன பேச வச்சிராதீங்க’ -நடிகை சோனா பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 10, 2025 06:38 AM IST

வெப் சீரிஸ் பண்ணும் போது பெப்சியின் உதவியை நாட முடியாது. ஆனால், நம் ஆட்கள் தானே என்று நம்பினேன்.. ஒவ்வொருவரையும் கெஞ்சினேன்.. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் வந்தது. - நடிகை சோனா பேட்டி!

‘அவ்வளவு பஞ்சாயத்த பாத்தாச்சு.. கதறி கெஞ்சினேன்.. வேணாம் என்ன பேச வச்சிராதீங்க’ -நடிகை சோனா பேட்டி!
‘அவ்வளவு பஞ்சாயத்த பாத்தாச்சு.. கதறி கெஞ்சினேன்.. வேணாம் என்ன பேச வச்சிராதீங்க’ -நடிகை சோனா பேட்டி!

தவறுகள் செய்திருக்கிறேன்.

“நான் சில தவறுகள் செய்து இருந்தாலும், அதை திருத்திக் கொண்டு எல்லோருக்கும் உண்மையான வாழ்க்கை வாழ்வதை காட்ட நினைத்தேன். ஆனால் அதுவே தப்பாக போய்விட்டது. ஒருவேளை போலியாக இருந்திருந்தால், நான் நன்றாக இருந்திருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை. 

ஆனால், பண்ணாத தவறுகளுக்காக இப்போது நான் கஷ்டங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். நான் பண்ணிய நல்ல விஷயங்களை மறைத்து விட்டார்கள். இப்போது கூட நான் உலகத்தை குற்றம் சாட்ட விரும்பவில்லை. அதேசமயம் நான் தவறு செய்யவில்லை.. 

‘கனிமொழி’ படத்தின் மூலம் நான் இழந்தது என்னுடைய பணம். அதற்கு யாரையும் நான் குறை சொல்ல தயார் இல்லை. அது என் தவறு. ஆனால், இந்த முறை ஓடிடி தளத்திலிருந்து பணம் பெற்று இந்த புராஜெக்டை தொடங்கினேன்.

ஒவ்வொருவரையும் கெஞ்சினேன்..

வெப் சீரிஸ் பண்ணும் போது பெப்சியின் உதவியை நாட முடியாது. ஆனால், நம் ஆட்கள் தானே என்று நம்பினேன்.. ஒவ்வொருவரையும் கெஞ்சினேன்.. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் வந்தது. அதன் பிறகு, நிஜமாகவே உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என உதவி செய்ய வந்தவர்கள் சொன்னபோது, அப்பாடா நமக்கு ஆதரவு கிடைக்கப் போகிறது என நம்பினேன். 

அதன் பிறகு மீண்டும் இழுத்தடித்தார்கள்; ஆனால், கடைசியில் நீ ஏமாந்தது உண்மை, அவர் உன்னை ஏமாற்றியது உண்மை,, இனி நீ படப்பிடிப்புக்கு போக முடியாது,, அவரால் உனக்கு பணம் தர முடியாது,, யாருக்கெல்லாம் பாக்கி இருக்கிறதோ நீ தான் அதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள், இதை சொல்லியே என்னை ஐந்து மாதம் வீட்டில் உட்கார வைத்தார்கள்.

என்னை சுற்றி இருப்பவர்கள் கூட இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஒவ்வொருவராக விலகி சென்றார்கள். ஒரு கட்டத்தில் என் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த பிறகு தான், துணிச்சலை வரவழைத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தை அணுக, நீங்கள் ஷூட்டிங் நடத்துங்கள் என ஆதரவு குரல் கொடுத்தார்கள்.

மோசமான மேனஜர் 

மோசமான அந்த மேனேஜரை சப்போர்ட் செய்வதற்காக அவருக்கு மேலிருப்பவர் வருகிறார்.. அவரும் இரண்டு முறை எனக்கு ஆதரவாக பேசுவது போல பேசினார். அதன் பிறகு படப்பிடிப்பு நடந்த போது தேவையான பணம் கொடுத்து ஏற்பாடு செய்யச் சொன்னேன். உரிய வவுச்சர்களுடன் கணக்கு வந்தது. 

அதை எல்லாம் உண்மை என்று நம்பினேன். ஆனால், ஐந்தாவது நாள் ஒரு தொழிலாளி என்னிடம் வந்து நான்கு நாட்களாக சம்பளம் வரவில்லை இன்று கிடைக்குமா என்று கேட்டபோதுதான், மேனேஜர் சுரேஷ் நான் பணக்கஷ்டத்தில் இருப்பதாக கூறி, அவர்களை நம்ப வைத்து, அவர்களிடம் வவுச்சரில் கையெழுத்து வாங்கி இருக்கிறார் என்பதே தெரிய வந்தது.

அந்த தவறையும் செய்துவிட்டு மீண்டும் என்னிடம் தில்லாக வந்து வழக்கம் போல பணம் கேட்டார். அதன் பிறகு நான் உங்களை ஏமாற்றினேன் என கைப்பட எழுதியும் தந்தார். ஆனாலும், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சரி இவற்றில் இருந்து ஒதுங்கி இருந்தால் பிரச்சினை இல்லை என நினைத்தால், அப்போதும் பிரச்சினை தொடர்ந்தது. அதனால் கொஞ்சம் துணிச்சலாக மீண்டும் எழுந்து வேலைகளை ஓரளவுக்கு முடித்தேன். கொஞ்சம் அமைதியாக இருந்தார்கள்.

பேச வைத்து விடாதீர்கள் 

இப்போது இதை ஏன் சொல்கிறேன் என்றால் 2015ல் ஒரு பிரச்சினை வந்து ஓரளவு சரியானது. ஆனால், இந்த 2024 வரை எதுவும் பேசாமல் வாயை மூடி அமர்ந்தது தான் தவறு என இப்போது நினைக்கிறேன். தயவுசெய்து என்னை வாயைத் திறந்து எதுவும் பேச வைத்து விடாதீர்கள். 

என்னை விட்டு விடுங்கள்.. 200 ரூபாய் இருக்கும்போது கூட நான் பிச்சை எடுக்கவில்லை.. ஆனால் இயக்குநரான பிறகு பிச்சை எடுத்தேன்.. இயக்குநராக வேண்டும் என்றால் பிச்சை எடுக்க வேண்டுமா என்ன?

இந்த படத்தில் டீனேஜில் இருந்து 30 வயது வரையிலான எனது கதாபாத்திரங்கள் நான்கு பருவங்களாக இடம் பெற்று இருக்கும். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஜம்ப் இருக்கும். சில விஷயங்களை சொல்லாமலே சென்றிருப்போம். ஆனால், கடைசியில் அதற்கு ஒரு விடை சொல்லி இருப்போம். இந்த நான்கு பருவங்களிலும் ஒவ்வொரு கேள்வி இருக்கும். இதில் ஏதாவது ஒரு கேள்வியில் இருந்து அடுத்த பாகம் தொடங்கும். மொத்தம் எட்டு எபிசோடுகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொன்றும் 25 முதல் 30 நிமிடம் வரை இருக்கும்.

நானும் ஒருவரை காதலித்தேன். அது யார் என்று இப்போது சொல்ல மாட்டேன்.. எல்லாருக்கும் தெரிந்த ஆள் தான்.  என்னுடைய 2010-15 காலகட்டத்திய வாழ்க்கை தான் இந்த முதல் சீசனில் இடம் பெறுகிறது. ஆனால், இந்த வெப் சீரிஸில் என்னுடைய தந்தையின் கதாபாத்திரத்தின் சாயல் தெரியும் விதமாக நடிகர்களை காட்டியிருக்கிறேன். நீங்களாக அதை டி-கோட் செய்து கொள்ள வேண்டியதுதான்.

இந்த ‘ஸ்மோக்’ வெப்சீரிசை துவங்கும்போது ஒரு பத்து பேர்களைப் பற்றிய விஷயத்தை, அவர்கள் குடும்பத்தை பாதிக்காதவாறு சொல்வதற்கு திட்டமிட்டேன். நான் உதவி இயக்குநராக வேலை பார்க்க கிட்டத்தட்ட எட்டு இயக்குநர்களை அணுகினேன். ஆனால் அவர்களோ நீங்கள் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள்; கவர்ச்சியான பெண்ணாகவும் இருக்கிறீர்கள்.. நான் உங்களை பார்ப்பேனா ? பாதுகாப்பேனா ? என்னுடைய படவேலையை பார்ப்பேனா என்று கேட்டார்கள். அதனால், விட்டு விட்டேன். எனக்கு எல்லாருடைய டைரக்ஷனும் பிடிக்கும். என்றாலும் ரொம்ப பிடித்தது என்றால் பாலுமகேந்திரா, பரதன் ஆகியோரின் ஸ்டைல் தான்.

‘ஸ்மோக்’ என பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. ஓடிடி நிறுவனமும் அதை ரொம்பவே விரும்பினார்கள். இந்த படத்திற்காக சில நடிகர்களை அணுகிய போது நாங்கள் பிட்டு படங்களில் நடிப்பதில்லை என்கிற ரேஞ்சுக்கு பேசினார்கள். படம் பாருங்கள் .. உங்களுக்கே தெரியும்.’ என்று பேசினார்.