Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் ரஜினியின் மனைவி.. ஏமாற்ற வலை விரித்த கும்பல் - வீடியோ மூலம் தெரிவித்த மலையாள நடிகை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் ரஜினியின் மனைவி.. ஏமாற்ற வலை விரித்த கும்பல் - வீடியோ மூலம் தெரிவித்த மலையாள நடிகை

Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் ரஜினியின் மனைவி.. ஏமாற்ற வலை விரித்த கும்பல் - வீடியோ மூலம் தெரிவித்த மலையாள நடிகை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Mar 15, 2025 06:58 PM IST

Jailer 2: ரஜினிகாந்த் மனைவியாக நடிக்க தேர்வாகியுள்ளீர்கள். நடிகர் சங்க உறுப்பினர் கார்டுக்காக முதல் தவணையாக பணம் கொடுங்கள் என சொன்னது சந்தேகம் வலுத்தது என தன்னை ஏமாற்ற முயற்சித்தது குறித்து நடிகை ஷைனி சாரா தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் ரஜினியின் மனைவி.. ஏமாற்ற வலை விரித்த கும்பல் - வீடியோ மூலம் தெரிவித்த மலையாள நடிகை
ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் ரஜினியின் மனைவி.. ஏமாற்ற வலை விரித்த கும்பல் - வீடியோ மூலம் தெரிவித்த மலையாள நடிகை

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடித்த பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த பாகத்தையும் இயக்குகிறார். அத்துடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்பட பலரும் இந்த பாகத்தில் நடிக்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் மனைவியாக நடிக்க தேர்வாகி இருப்பதாக கூறி மலையாள நடிகை ஷைனி சாரா என்பவரிடம் மோசடி முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து நடிகை ஷைனி சாரா தனது சமூக வலைத்தளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னிடம் விரிக்கப்பட்ட மோசடி வலை குறித்து பேசியுள்ளார்.

ரஜினி மனைவியாக நடிக்க தேர்வாகியுள்ளீர்கள்

அதில், ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்க நீங்கள் தேர்வாகி இருக்கிறீர்கள் என்று எனது வாட்ஸ் ஆப்பில் செய்தி ஒன்று வந்தது. நானும் அதை நம்பினேன் மெசேஜ் அனுப்பியவர்களிடம் பேசினேன். அப்போது உங்களிடம் நடிகர் சங்க உறுப்பினர் கார்டு இருக்கிறதா? என்று கேட்டார்கள். இல்லை என சொன்னதும், நாங்கள் அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று பதில் கூறப்பட்டது.

இதன் பிறகு சுரேஷ்குமார் என்பவர் உங்களிடம் பேசுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாள் கழித்து சுரேஷ்குமார் என்பவர், சேலை அணிந்து வீடியோ காலில் வரும்படி கூறினார். அதன்படி நானும் வீடியோக காலில் தொடர்பு கொண்டேன். என்னை பார்த்துவிட்டு நீங்கள் ரஜினிகாந்த் மனைவியாக நடிக்கத் தேர்வாகி விட்டீர்கள் என்றார்கள்.

நடிகர் சங்க உறுப்பினர் கார்டுக்கு பணம்

முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தாரே. பிறகு என்னை எப்படி நடிக்க வைப்பீர்கள்?’ என்று கேட்டேன். ‘உங்களை இன்னொரு கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்துள்ளோம்’ என்று கூறிவிட்டு, நடிகர் சங்க உறுப்பினர் கார்டுக்காக ரூ.12,500 அனுப்புமாறு கேட்டார். அப்போது எனக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் இரண்டு நாள்களில் தருகிறேன் என பதில் கூறினேன். அப்போது முதல் தவணையாகக் கொஞ்சம் அனுப்புங்கள் என்றதும் சந்தேகம் மேலும் வலுத்தது.

எச்சரிக்கையாக இருங்கள்

இதைத்தொடர்ந்து என் போனை போனை ஆஃப் செய்துவிட்டு, சக நடிகைகளிடம் விசாரித்தேன். படங்களில் நடிக்க நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற அவசியமில்லை என்றனர். நான் மீண்டும் அந்த நபரின் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது போன் ஆஃப் ஆகி இருந்தது.

பிரபலமாக இருக்கும் நடிகைகளிடமே இப்படியெல்லாம் மோசடி நடக்கிறது. எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 படம்

பெங்கல் நாளான ஜனவரி 14ஆம் தேதி ஜெயிலர் 2 படம் குறித்து டீஸர் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இந்த பாகத்தையும் மிக பெரும் பொருள் செலவில் தயாரிக்கிறது. ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணன் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 2025ஆம் ஆண்டு, 50வது ஆண்டாக உள்ளது. இது அவரது 50வது ஆண்டில் உருவாகும் படமாக உள்ளது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.