Actress shanthi williams: ‘தூக்குப்போட்ட சேலையிலதான் கடைசியா..பாலு மகேந்திரா ஷோபாவ அழிச்சிட்டான்’ - - சாந்தி பேட்டி!
Actress shanthi williams: அவள் தற்கொலை செய்து இறந்து விட்டாள் என்று சொன்னவுடன், எனக்கு உயிரே போய்விட்டது. என்னுடைய கணவர் தான் அவருடைய அறையின் கதவை உடைத்து காலெல்லாம் கிழித்துக்கொண்டு, ஆட்களை மேலே ஏற்றி சோபாவை தூக்கு சேலையில் இருந்து, கீழே இறக்கினார் - சாந்தி பேட்டி!

Actress shanthi williams: நடிகை ஷோபாவின் இறப்பு குறித்தும், பாலுமகேந்திரா குறித்தும் பிரபல நடிகையான சாந்தி வில்லியம்ஸ், மின்னம்பலம் ப்ளஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
ஷோபா உயிர் போன்றவள் -
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “நடிகை ஷோபா என்னுடைய உயிர் போன்றவள். அப்போது, காமம் குரோதம் மோகம், அக்கிள் தாமா என இரண்டு படங்களை நான் செய்தேன். அக்கிள் தாமா படத்தில் ஷோபா என்னுடைய தங்கையாக நடித்தாள்.அந்த சமயத்தில் எனக்கு 13, 14 வயதுதான் இருக்கும். அந்த படம் செய்யும்பொழுது, நாங்கள் ஓடிப் பிடித்து விளையாடுவோம்.
அவள் அப்போது மிகவும் சிறியவள். அவள் என்னுடைய மடியில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். என்னுடன் விளையாடுவாள். சாக்லேட் கொடுத்தால், வாங்கி சாப்பிட்டுக்கொள்வாள். மூடுபனி படத்தின் படப்பிடிப்பில், கடைசியாக அவள் தூக்கு மாட்டிக் கொண்டாளே, அதே சேலையைத்தான் அவள் உடுத்தியிருந்தாள்; அப்போது நான் அவளிடம், ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்டேன்.