‘கேரள சினிமாவை கழுவி ஊற்றும் ஷகீலா.. ஆணாதிக்கத்துக்கு பேர் போனது.. ’ கோவத்தை கொட்டித் தீர்த்த ஷகீலா..
கேரள சினிமா ஆணாதிக்கத்தின் உச்சத்தை கொண்டுள்ளது என நடிகை ஷகீலா தனது ஆதங்கத்தையும் கோவத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
திரையுலகில் புதுமையான படைப்புகளுக்கும் மண் சார்ந்த படைப்புகளுக்கும் பெயர் போனது என்றால் கேரளா தான். மக்கள் மனம் பேசும் எதார்த்த படைப்புகள் அங்கே கொட்டிக் கிடக்கும் எனவும் காட்சி அமைப்புகளும் இசையும், வசனமும் மக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் எனவும் கூறி சிலாகித்து வரும் சமயத்தில் தான் வெளியானது ஹேமா கமிட்டி அறிக்கை.
ஹேமா கமிட்டி அறிக்கை
அந்த அறிக்கை வெளியான சமயத்தில், கேரள சினிமாவின் பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் செய்த அத்தனை சில்மிஷங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவை சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கேரள திரைத்துறையில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை மட்டுமே பேசியது. ஆனால், நாகரீகமும் கலாச்சாரமும் மாறிவரும் இந்த காலத்தில் இந்த அறிக்கைக்கு வாக்குமூலம் எடுத்திருந்தால் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும்.
கூண்டோடு ராஜினாமா
என்னவாக இருப்பினும், இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கையால் ஆடிப்போன கேரள அரசின் திரைப்பட சங்கமான அம்மா அசோசியேஷன் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாய் நின்று நீதி வழங்க வேண்டியவர் கூண்டோடு ராஜினாமா செய்ததே பெரும் பேசுபொருளாக அமைந்தது.
குடிகாரர்களிடம் மாட்டிய நடிகை
இந்நிலையில், கேரள திரைத்துறையை ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை ஷகீலா அங்கு நடக்கும் சில விஷயங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக கலாட்டா மீடியா யூடியூப் சேனலிடம் பேசியுள்ளார்.
கேரளாவில் படம் நடிக்க நான் சென்றிருந்த சமயத்தில் என் அறைக்கு எதிரில் இருக்கும் அறையில் ஒரு நடிகை இருந்தார். அவரை காண குடித்துவிட்டு 4 பேர் வந்து கலாட்டா செய்தனர்.
தடுக்க போய் விழுந்த அடி
இதைப் பார்த்து பயந்து அவர் கத்திய சத்தம் கேட்டது. அப்போது நானும் என் தம்பியும், சில உதவியாளர்களும் போய் அந்த நடிகையை விடுவிக்க முயற்சி செய்தோம்.
அப்போது அங்கிருப்பவர்கள் என்னை அடிக்க, நான் திரும்ப அவர்களை அடிக்க பிரச்சனை பெரிதானது. இதற்கு எல்லாம் யார் காரணம்.
எப்போதும் ஒரு தவறு நடக்கும் போது அதில் ஆண்களை மட்டும் தவறு சொல்ல முடியாது. ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் போது அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
என் படங்களுக்கு தடை
கேரள திரைத் துறையில் நடக்கும் விஷயங்களுக்கு நானே ஒரு சாட்சி தான். 2000ஆம் ஆண்டு நான் கேரள திரையுலகில் நான் நடித்த திரைப்படங்கள் தடை செய்தாங்க. நான் படமே நடிக்க கூடாதுன்னு நெனச்சாங்க.
கேரளால இருந்த முஸ்லீம் மமினிஸ்டர் கிட்ட போய் பேசுனாங்க. இதெல்லாம் ஒரு நடிகர் மூலமா எனக்கு தெரிஞ்சது. இது எல்லாமே அந்த அம்மா அசோசியேஷன் எனக்கு எதிரா பண்ண விஷயங்கள்.
ஆணாதிக்க அசோசியேஷன்
அப்படி நான் இந்த அம்மா அசோசியேஷன்ல இருக்கவங்களுக்கு என்ன பண்ணிட்டேன். உங்க தியேட்டர் எல்லாம் கல்யாண மண்டபமா மாற இருந்தது. அத நான் தடுத்து நிறுத்தி மறுபடியும் தியேட்டராகவே மாத்தினேன். என் படத்துக்கான டிக்கெட்ல உங்களுக்கான டாக்ஸ் கிடைச்சது. ஆனா இந்த ஆணாதிக்கம் கொண்ட அம்மா அசோசியேஷன் எனக்கு எதிரா திரும்புது.
கேரளா சினிமாவுல ஆம்பளைங்க தான் வெளிய கெத்தா இருக்கனும்,. பொம்பளைங்க எல்லாம் அடக்கமா இருக்கணும். அவனுங்க முன்னாடி வேற ஸ்டேட்ல இருந்து ஒரு பொன்னு வந்து நடிச்சா விட்ருவாங்களா?
ஈகோ தாங்க முடியல
அவங்க 4 கோடி போட்டு படம் எடுக்குறாங்க. நான் 14 லட்சத்துல படம் எடுக்குறேன். எல்லா வெள்ளிக்கிழமையும் என் படம் ரிலீஸ் ஆகுது. என் படம் ஓடுற தியேட்டர் புல்லா இருக்கு. உன் படம் ஓடுற தியேட்டர் காலியா இருக்கு. அந்த ஈகோவ ஏத்துக்க முடியாம இப்படி எல்லாம் பண்றாங்க. இதபத்தி 2000ல இருந்து நான் பேசுறேன் எனக்கு சப்போர்ட்டா யாரும் வரல என்று தன் கோவத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
டாபிக்ஸ்