நடிகை சீதா வீட்டில் நேர்ந்த சோகம்.. இன்ஸ்டாகிராமில் சோகமாக போட்ட பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகை சீதா வீட்டில் நேர்ந்த சோகம்.. இன்ஸ்டாகிராமில் சோகமாக போட்ட பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

நடிகை சீதா வீட்டில் நேர்ந்த சோகம்.. இன்ஸ்டாகிராமில் சோகமாக போட்ட பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

Divya Sekar HT Tamil Published Jan 04, 2025 10:13 AM IST
Divya Sekar HT Tamil
Published Jan 04, 2025 10:13 AM IST

நடிகை சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிந்தார். இதுகுறித்து நடிகை சீதா தனது இன்ஸ்டாகிராமில் சோகமாக பதிவிட்டுள்ளார்.

நடிகை சீதா வீட்டில் நேர்ந்த சோகம்.. இன்ஸ்டாகிராமில் சோகமாக போட்ட பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
நடிகை சீதா வீட்டில் நேர்ந்த சோகம்.. இன்ஸ்டாகிராமில் சோகமாக போட்ட பதிவு.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்தார்

ஆண் பாவம் படத்தில் கிராமத்து பெண்ணாக ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில், பாவாடை தாவணியில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சீதா. இந்த படத்திற்கு பின் ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர் குரு, தங்கச்சி, துளசி, குரு சிஷ்யன், பெண்மணி அவள் கண்மணி, அவள் மெல்ல சிரித்தாள் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்தார்.

இவர் நடிக்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக மட்டுமே நடித்தாலும் பின்னாளில் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடிக்கத் துவங்கினார். திரைப்படங்களில் மட்டுமின்றி இவர் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் பார்த்திபனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பின்னர் இவர் சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரிடம் இருந்தும் விவகாரத்து பெற்றார். சீதா – பார்த்தீபன் தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா, ராக்கி என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நடிகை சீதாவின் தாயார் காலமானார்

இந்நிலையில், நடிகை சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிந்தார். இதுகுறித்து நடிகை சீதா தனது இன்ஸ்டாகிராமில் சோகமாக பதிவிட்டுள்ளார். நடிகை சீதா தற்போது விருகம்பாக்கத்தில் அவரின் தாயாருடன் வசித்து வந்த நிலையில் இன்று காலை சீதாவின் தாயார் காலமானார்.இந்த தகவலை நடிகை சீதா தனது இன்ஸ்டாகிராமில், அம்மாவின் போட்டோவை போட்டு, இன்று எங்களது பாசமிகு தாயார் சந்திரா மோகன் காலமானார் என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பதுடன் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.