‘உண்மையான அன்பு என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்’: நடிகை சமந்தா பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘உண்மையான அன்பு என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்’: நடிகை சமந்தா பேச்சு

‘உண்மையான அன்பு என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்’: நடிகை சமந்தா பேச்சு

Marimuthu M HT Tamil Published May 05, 2025 04:42 PM IST
Marimuthu M HT Tamil
Published May 05, 2025 04:42 PM IST

நட்சத்திர நாயகி சமந்தா, 'சுபம்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார். திகில் நகைச்சுவை குடும்ப படமான சுபம் தெலுங்கு திரைப்படம், த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் பதாகையின்கீழ், சமந்தாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘உண்மையான அன்பு என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்’: நடிகை சமந்தா பேச்சு
‘உண்மையான அன்பு என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்’: நடிகை சமந்தா பேச்சு

அந்த முதல் படத்தின் பெயர் 'சுபம்'. த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பேனரின்கீழ் சமந்தா, இந்த சுபம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். சுபம் படத்தை பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.

சுபம் படத்திற்கு விவேக் சாகர் பின்னணி இசையமைத்திருக்கிறார். சுபம் திரைப்படம் வரக்கூடிய மே 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையொட்டி, சுபம் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் சமந்தா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார்.

’விசாகப்பட்டினம் வரும்போதெல்லாம் பிளாக்பஸ்டர் படங்கள் வரும்’: சமந்தா

இதுதொடர்பாக, நடிகை சமந்தா,"நான் விசாகப்பட்டினத்தில் வரும்போதெல்லாம் ஒரு பிளாக்பஸ்டர் படம் வரும். விசாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்ட மஜிலி, ஓ பேபி, ரங்கஸ்தலம் ஆகியப் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

விசாகப்பட்டினத்தில் ரசிகர்களைப் பார்த்தேன். உண்மையான அன்பு என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது. எங்கள் இயக்குனர் பிரவீன் எனர்ஜியைப் பார்த்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன்" என்று சமந்தா கூறினார்.

மேலும் சமந்தா,"ஒரு தயாரிப்பாளராக, நான் இந்த 'சுபம்' படத்தை ஒரு புதிய யோசனையுடன் தொடங்கினேன். புதியவர்களைக் கொண்டு, புதிய கதைகளை உருவாக்கி, அனைவரையும் மகிழ்விக்கும் நோக்கத்துடன் நான் ’த்ரலாலா புரொடக்ஷன்’ பேனரைத் தொடங்கினேன்.

அதுதான் எனது குறிக்கோள். மே 9ஆம் தேதி உங்கள் குடும்பத்துடன் எங்கள் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நீங்கள் நன்றாகச் சிரிப்பீர்கள்.

விசாகப்பட்டினம் மக்கள் 'சுபம்' படத்திற்கும் ஒரு நல்ல பிளாக்பஸ்டர் வெற்றியைத் தருவார்கள் என்று நினைக்கிறேன்," என்று சமந்தா கூறினார்.

'இதுபோன்ற புதிய கன்டென்ட் தெலுங்கில் இதுவரை வந்ததில்லை’: இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுல்

இதுதொடர்பாக இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுலா கூறுகையில், "சுபம் ஒரு அற்புதமான படமாக இருக்கப் போகிறது. இதுவரை, தெலுங்கில் இதுபோன்ற கன்டென்ட் எதுவும் வந்ததில்லை.

இது போன்ற புதிய கன்டென்ட் வெளிவருவது மிகவும் அரிது. இது போன்ற திகில் மற்றும் நகைச்சுவை வகைகளில் எந்தப் படமும் வந்ததில்லை. இப்போது, இதுபோன்ற படங்கள் ஒரு பிராண்டாக மாறிவிட்டன" என்று இயக்குநர் கூறினார்.

மேலும் அவர்,"சமந்தா போன்றவர்கள் இல்லையென்றால், எங்கள் 'சுபம்' படத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க முடியாது. ராஜ் மற்றும் டிகே, என் மீது நம்பிக்கை வைத்து 'சினிமா பண்டி' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். நான் அவர்களுக்கு எப்போதும் கடமைப்பட்டிருப்பேன். ஒரு படம் எழுத்தாளர்களின் பலத்தில் நிற்கிறது. இந்தப் படத்திற்கு வசந்த் சிறந்த கன்டென்ட்டை எழுதி வழங்கியுள்ளார்," என்று இயக்குநர் பிரவீன் கண்ட்ரேகுலு கூறினார்.

’படம் பிளாக்பஸ்டராக இருக்கும்’: இயக்குநர் பிரவீன் காண்ட்ரேகுல்

"ஹர்ஷித் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். ஸ்ரீநிவாஸ் ஒரு இயக்குநராக அல்ல, ஒரு நடிகராக எங்களுடன் இணைந்தார். ஷாலினி மற்றும் சரண் நன்கு நடித்திருக்கிறார்கள்.

காலை காட்சிகளில் இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். மே 9ஆம் தேதி, பட ரிலீஸின்போது, எல்லாப் பேச்சும் வெளியாகும்.

எல்லோரும் படத்தைப் பற்றிப் பேசுவார்கள். இந்தப் படம் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும்," என்று பிரவீன் காண்ட்ரேகுல் நம்பிக்கை தெரிவித்தார்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.