'எனக்கு கோயில் எல்லாம் கட்டாதீங்க.. நான் அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன்..'- நடிகை சமந்தா
நடிகை சமந்தா தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான சுபம் படத்தின் வெளியீட்டிற்காக மிக ஆவலாக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

நடிகை சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் சுபம். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 6) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ஒரு தயாரிப்பாளராக தனது முதல் வெள்ளிக்கிழமைக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார். அதே சமயம் தனக்கு கோயில் கட்டி வழிபடுவது பற்றியும் பேசியுள்ளார்.
தயாரிப்பாளராக முதல் வெள்ளிக்கிழமை
சமந்தா பேசுகையில் "ஒரு நடிகையாக, வெள்ளிக்கிழமை எப்படி இருக்கும் என்பது குறித்து எனக்கு அனுபவம் உண்டு. ஆனால் ஒரு தயாரிப்பாளராக இது எனது முதல் வெள்ளிக்கிழமை இது. நான் மிகவும் பதட்டமாக இருக்கிறேன். தயாரிப்பாளர் எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பது இப்போது புரிகிறது.
கடந்த ஒரு வாரமாக நான் தூக்கமில்லாத இரவுகளைக் கொண்டிருந்தேன், போஸ்ட் புரொடக்ஷன் டீம், மிக்ஸிங் டீம், எடிட்டிங் டீம் மற்றும் எல்லோரும் தூக்கமின்றி வேலை செய்கிறார்கள். எனது குழு மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. 'சுபம்' படம் நன்றாக வந்திருக்கிறது. நல்ல கதை. படத்தின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் சமந்தா.
சுபம் தலைப்பு ஏன்?
தான் தயாரித்த முதல் படத்தை சுபம் என்று அழைத்ததற்கான காரணத்தையும் சமந்தா விளக்கினார். 'சுபம்' என்ற தலைப்புக்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த படம் பெரும்பாலும் சீரியல் பற்றியது. இந்த சீரியலை எப்போது சுபம் கார்டு போட்டு முடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவரின் மத்தியிலும் இருக்கும். அதனால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தது போல் சுபம் என பெயர் வைத்தோம். எனது தயாரிப்பு நிறுவனம் ட்ரா லா லா லா என்று அழைக்கப்பட்டதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. சிறுவயதில் ஒரு கவிதை படித்தேன். அதில் இருந்த ட்ரா லா லா என்ற வார்த்தையை வைத்து இந்த பெயரை வைத்தேன் என்றார்.
கௌதம் மேனன் போல நானும்..
தயாரிப்பாளராக தனது முதல் படத்திலேயே புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது குறித்து சமந்தா கருத்து தெரிவித்துள்ளார். "கௌதம் மேனன் ஜி எனக்கு முதல் வாய்ப்பை வழங்கினார். அவர் நினைத்திருந்தால் அந்த நேரத்தில் எந்த டாப் ஹீரோயினும் நடித்திருப்பார். ஆனால் என்னை போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். ஒரு தயாரிப்பாளராக புதுமுகங்களை மகிழ்விப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளேன்" என்றார்.
உதவி கேட்க விரும்பவில்லை
படத்தில் தனது கௌரவ தோற்றம் குறித்து சமந்தா பேசுகையில், "சுபம் படத்தில் நான் கௌரவ வேடத்தில் நடிக்கக் கூடாது. ஆனால் ஒரு தயாரிப்பாளராக முதல் முறையாக, நான் யாரிடமும் சென்று உதவி கேட்க விரும்பவில்லை. அதனால்தான் நானே அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். இந்த படத்தை இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே என்னால் விளம்பரப்படுத்த முடியும். அதன் பிறகு படத்தின் முழு சுமையும் பார்வையாளர்கள் மீது இருக்கும் என்றார்.
எனக்கு கோவில் கட்ட வேண்டாம்
சிகர் ஒருவர் கோவில் கட்டி வழிபடுவது பற்றியும் சமந்தா இங்கு பேசினார். ரசிகர் ஒருவர் எனக்கு கோவில் கட்டியதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். நீங்கள் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறீர்களா என்று நான் ஆச்சரியப்பட்டேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர் தன் அன்பை வெளிப்படுத்திய விதம் அதுதான் என்று தோன்றியது. ஆனால் நான் கோயில்களில் கட்டி வைத்து இப்படி வழிபடுவதை என்னால் ஆதரிக்க முடியாது. அவ்வாறு செய்ய வேண்டாம்" என்று அறிவுரை வழங்கினார்.
