சினிமாவுல என்ன ரொம்ப பாதிச்ச விஷயத்த.. என்னால எதுவும் செய்ய முடியல.. ஆனா? மீண்டு எழுந்து சமந்தா சொன்ன கதை..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சினிமாவுல என்ன ரொம்ப பாதிச்ச விஷயத்த.. என்னால எதுவும் செய்ய முடியல.. ஆனா? மீண்டு எழுந்து சமந்தா சொன்ன கதை..

சினிமாவுல என்ன ரொம்ப பாதிச்ச விஷயத்த.. என்னால எதுவும் செய்ய முடியல.. ஆனா? மீண்டு எழுந்து சமந்தா சொன்ன கதை..

Malavica Natarajan HT Tamil
Published Apr 14, 2025 06:34 AM IST

நடிகை சமந்தா திரையுலகில் சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினையை எதிர்கொண்டது பற்றியும், அனைத்து கலைஞர்களுக்கும் சமமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் பற்றியும் பேசியுள்ளார்.

சினிமாவுல என்ன ரொம்ப பாதிச்ச விஷயத்த.. என்னால எதுவும் செய்ய முடியல.. ஆனா? மீண்டு எழுந்து சமந்தா சொன்ன கதை..
சினிமாவுல என்ன ரொம்ப பாதிச்ச விஷயத்த.. என்னால எதுவும் செய்ய முடியல.. ஆனா? மீண்டு எழுந்து சமந்தா சொன்ன கதை..

வித்தியாசமான சம்பளம்

பேட்டியின் போது, சம்பள பாகுபாடு பிரச்சினை பற்றி பேசிய சமந்தா, “நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஆண்களுக்கு நிகராக சமமான நாட்கள் வேலை செய்து, சமமான வேலைகளைச் செய்தாலும், மிகவும் வித்தியாசமான சம்பளம் கொடுக்கப்பட்டது.

எல்லாம் புரிகிறது

ஹீரோ-மையமான பெரிய படங்களில், ஹீரோ தான் பார்வையாளர்களை திரையரங்கிற்கு இழுப்பார் என்பது எனக்குப் புரிகிறது. அதில் வித்தியாசம் இருப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் சமமான வேலைகளுக்கு இன்னும் இந்த பெரிய வித்தியாசம் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்றார்.

‘எதிர்காலத்தைப் பற்றி நான் ஏதாவது செய்ய முடியும்’

மேலும் அவர், “15 வருடங்கள் இந்தத் துறையில் இருக்கிறேன். எனக்குத் தெரிந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதே எனது முயற்சி. எனது வாழ்நாளில், என் சூழ்நிலையைப் பற்றி நான் எதுவும் செய்ய முடியாது. ஆனால் எதிர்காலத்தைப் பற்றி நான் ஏதாவது செய்ய முடியும். நான் செய்யாவிட்டால், வேறு யார் செய்வார்கள்?

நோக்கத்தை காண்பீர்கள்

உங்களை தொந்தரவு செய்யும் விஷயங்களுக்குப் பின்னால் உங்கள் எடையை வைக்க வேண்டும். உங்களை தொந்தரவு செய்யும் விஷயங்களில் தான் உங்கள் நோக்கத்தைக் காண்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அதுவே எனது வாக்குறுதி, என் நோக்கம் என்னை தொந்தரவு செய்யும் விஷயங்களில் தான் இருக்கிறது. நான் உருவாக்குவது அனைத்தும் என்னை தொந்தரவு செய்த விஷயங்களைச் சுற்றியே இருக்கிறது.” என்றார்.

தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

சமந்தா தனது தயாரிப்பு நிறுவனமான த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு தொடங்கினார். சமீபத்தில் BIFFES இல் அளித்த பேட்டியில் திரைப்படங்களில் பாலினங்களை வைத்து சம்பள ஏற்றத்தாழ்வு நடப்பது பற்றி பேசிய நந்தினி ரெட்டி, சமந்தா தனது முதல் தயாரிப்பாளராகும் படத்தில் அனைவருக்கும் சம்பளம் அளிப்பதில் சமத்துவத்தை உறுதி செய்ததாகக் கூறி திரையுலகினர் மத்தியில் இப்படியான விஷயத்தை வெளிப்படுத்தினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.