'ஓ அன்டாவா பாடலில் நடிக்கும் போது பயத்தில் நடுக்கினேன்.. அது எனக்கு சவாலாக இருந்தது'- நடிகை சமந்தா
நடிகையும் தயாரிப்பாளருமான சமந்தா, தான் முதல் முதலில் கவர்ச்சியாக நடனமாடிய ஓ அன்டாவா பாடல் குறித்தும் அந்தப் பாடலுக்கு ஒப்புக் கொண்ட போது இருந்த மனநிலை குறித்தும் பேசியுள்ளார்.

'ஓ அன்டாவா பாடலில் நடிக்கும் போது பயத்தில் நடுக்கினேன்.. அது எனக்கு சவாலாக இருந்தது'- நடிகை சமந்தா
நடிகை சமந்தா அல்லு அர்ஜுனுடன் இணைந்து, புஷ்பா: தி ரைஸ் படத்தில் தனது அற்புதமான நடனப் பாடலான 'ஓ அன்டவா' பாடலில் நடித்ததன் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சமந்தாவின் கவர்ச்சியைக் கண்டு ரசிகர்கள் உருகினர்.
இருப்பினும், சமீபத்தில் கலாட்டா பிளஸுக்கு சமந்தா அளித்த பேட்டியில், சிறப்புப் பாடலைச் செய்வதை எதிர்த்து மக்கள் தனக்கு எப்படி அறிவுரை கூறினார்கள் என்பது குறித்து சமந்தா மனம் திறந்து பேசினார்.