திருப்பதியில் தரிசனம் செய்த நடிகை சமந்தா.. தொடர்ந்து வந்த கிசுகிசுக்கள்.. என்ன ஆச்சு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திருப்பதியில் தரிசனம் செய்த நடிகை சமந்தா.. தொடர்ந்து வந்த கிசுகிசுக்கள்.. என்ன ஆச்சு?

திருப்பதியில் தரிசனம் செய்த நடிகை சமந்தா.. தொடர்ந்து வந்த கிசுகிசுக்கள்.. என்ன ஆச்சு?

Malavica Natarajan HT Tamil
Published Apr 20, 2025 08:22 AM IST

நடிகை சமந்தா திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய வந்த நிலையில், அந்த செய்தியை பார்த்த பலரும் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

திருப்பதியில் தரிசனம் செய்த நடிகை சமந்தா.. தொடர்ந்து வந்த கிசுகிசுக்கள்.. என்ன ஆச்சு?
திருப்பதியில் தரிசனம் செய்த நடிகை சமந்தா.. தொடர்ந்து வந்த கிசுகிசுக்கள்.. என்ன ஆச்சு?

திருப்பதியில் சமந்தா

நடிகை சமந்தா நேற்று திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். பளிச்சிடும் இளஞ்சிவப்பு நிற சல்வாரில் சமந்தா அழகாகக் காட்சியளித்தார். இவருடன் இயக்குநர் ராஜ் கோயிலுக்கு வந்திருந்தார். அவர்களுடன் பாதுகாப்புப் பணியாளர்களும் இருந்தனர். மற்றொரு வீடியோவில், ஆர்ச்சகரின் உதவியுடன் இவர்கள் பூஜை செய்தனர். டிசம்பர் 2023 இல் சமந்தா 'ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான சுபம் படத்திற்காக இந்த பூஜை நடைபெற்றது.

சமந்தா கிசுகிசு

இந்த கிசுகிசுக்கு காரணம், சமந்தாவோடு சேர்த்து வைக்கப்பட்டு சமீப காலமாக கிசுகிசுக்கப்பட்டு வரும் ராஜ் நிதிமோரும் சமந்தாவுடன் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தது தான். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்னர், சமந்தா இயக்குநர் ராஜ் நிதிமோரை காதலிப்பதாகவும் அவருடன் சமந்தா டேட்டிங் செய்து வருபதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா- ராஜ் நிதிமோர்

ராஜ் நிதிமோர் 'ராஜ் அண்ட் டி.கே'யின் 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்ற ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தின் இணை இயக்குனர். இந்த திரைப்படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த தொடரின் இரண்டாவது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த தொடரின் படப்பிடிப்பு தளத்தில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தொடரை அடுத்து சமந்தா ஒரு திரைப்படத்திலும் இவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார். இவை எல்லாம் கிசுகிசுக்களை அதிகமாக்கிய நிலையிலும், சமந்தா இதுகுறித்து எந்தவிள விளக்கங்களும் அளிக்காமல் அவருடைய வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். ராஜ் முன்னதாக ஷாமலி டெ என்பவரை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தா

சமந்தா ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக இருந்தார். உடல்நலக் காரணங்களால் சில வருடங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ள இவர் தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார். சமந்தா நான்கு தென்னிந்திய திரைப்பட விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

திருமண வாழ்க்கை

இவர் தெலுங்கில் 'ஏ மாயா செசாவே' என்ற படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். பின் சில ஆண்டுகளிலேயே மனம் ஒத்து பரஸ்பரமாக பிரிந்தனர். இதைத் தொடர்ந்து நாக சைதன்யா கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சம்பளப் புரட்சி

சமந்தா டிசம்பர் 2023 இல் திராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இவர், திரைத் துறையில் இருபாலருக்கும் இடையிலான ஊதிய வேறுபாடுகளை உடைத்து அனைவருக்கும் சம ஊதியம் வழங்கியுள்ளதாக பலரும் கூறி வந்தனர். தனது படத்தில் நடித்த அனைவருக்கும் சம ஊதியம் வழங்கிய முதல் இந்திய நடிகை இவர்.