Sakshi Agarwal: 'இந்த விஷயத்த இதுக்கு முன்ன சொன்னதுல்ல.. அப்பா அம்மா சப்போர்ட் ரொம்ப முக்கியம்'- சாக்ஷி அகர்வால்
Sakshi Agarwal: சின்ன வயசில் தனக்கு உறவினரால் ஏற்பட்ட துன்புறுத்தல் குறித்து பேசி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், ரக்ஷிதா ஆகியோர், இவர்கள் அனைவரும் இணைந்து தற்போது ஃபயர் எனும் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாந்தினியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சதிஷ்குமார் இயக்கியுள்ளார்.
'நாகர்கோவில் காசி வழக்கு'
இந்த ஃபயர் படம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நாகர்கோவில் காசியின் வழக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை எனக் கூறப்படுகிறது.
இப்படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி நடிகை சாக்ஷி அகர்வால், சாந்தினி ஆகியோர் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அந்தப் பேட்டியில், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், பெற்றோர் அளிக்கும் பாதுகாப்பு உணர்வு போன்றவை குறித்து பேசி உள்ளனர்.
'எனக்கும் இது நடந்தது'
இந்தப் பேட்டியில் பேசிய சாக்ஷி அகர்வால், தன் குழந்தைப் பருவத்தில் நடந்த அத்துமீறல் குறித்த தகவல்களை முதல்முறையாக பேசியுள்ளார். அப்போது பேசிய சாக்ஷி, நான் மூன்றாவதோ நாலாவதோ படிக்கும் போது நடந்த விஷயம் இது. என்னுடைய ஆண்ட்டியோட கணவர் என்கிட்ட தப்பா நடந்துகிட்டாரு. அந்த வயசுல அவரு என்கிட்ட என்னமோ தப்பா பண்ண பாக்குறாருன்னு மட்டும் தான் தெரிஞ்சது.
அந்த வயசுல எனக்கு குட் டச், பேட் டச் குறித்த புரிதல் இருந்ததால, நடந்த விஷயத்த போய் எங்க அம்மாகிட்ட சொல்ற தைரியம் எனக்கு இருந்தது. நான் சொன்ன உடனே எங்க அம்மா அப்பா அதுக்கு உண்டான ஆக்ஷன எடுத்தாங்க. இன்னும் கூட எனக்கு அந்த ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமா இருக்கு.
'99.9% பெண்கள் பாதிக்கப்படுறாங்க'
அந்த காலத்துல இத பத்தி எல்லாம் பேச தைரியம் இருக்காது. ஆனா, இப்போ அப்படி இல்ல. வீட்ல, பிரண்ட்ஸ் கிட்ட இதபத்தி எல்லாம் பேசலாம். இருந்தாலும் 99.9% பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள தாண்டி தான் வந்திருக்காங்க. அத எப்படி கடந்து வர்றோம்ங்குறதுல தான் விஷயமே இருக்கு. எனக்கு லவ்வ வச்சு ஏமாத்துற எந்த விஷயமும் நடக்கல. கடவுள் அருளால நான் லவ் பண்ண ஒருத்தரோட தான் நான் இப்போவும் நல்லா இருக்கேன்" என்றார்.
'பெண்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க'
இவரைத் தொடர்ந்து பேசிய சாந்தினி, " சமூகத்தில் உள்ள பெண்கள் 99.9% பேர் பாலியல் ரீதியா துன்புறுத்தப்படுறாங்க. இப்போ, பாலியல் சீண்டலுக்கு எதிரான விழிப்புணர்வு எல்லாம் நிறைய வந்துடுச்சு. வீட்ல கூட பேச முடியுது. இல்லன்னா பெண்கள் அத மனசுக்குள்ளவே பூட்டி வச்சு ரொம்ப கஷ்டப்படுவாங்க" எனக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்