Priyanka Chopra: 'நேர்மையில்லாத உறவுகளால் நான் பாதிக்கப்பட்டேன்'- பிரியங்கா சோப்ரா ஷேரிங்ஸ்
Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா, தான் கடந்த கால நேர்மையில்லாத உறவுகளால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தான் தான் உறவு விஷயத்தில் சில தகுதிகளை எதிர்பார்த்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Priyanka Chopra: கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டை கலக்கி வந்த நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸை சந்திக்கும் முன் தனக்கு துணையாக வருபவரிடம் தான் தேடிய குணங்கள் என்ன என்பதை பற்றி விரிவாக பேசினார். மேலும், அவர் தனது காதலனைத் தேடிய பயணம் குறித்தும் பேசினார்.
காதலனிடம் விரும்பிய தகுதிகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகர் நிக் ஜோனாஸுடன் டேட்டிங் செய்வது பற்றி யோசிக்கத் தொடங்கிய நேரத்தைப் பற்றி பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். ஹார்பர்ஸ் பஜாருடனான ஒரு புதிய நேர்காணலில் பிரியங்கா சோப்ரா இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது, அவர் ஒரு குடும்பத்தை விரும்பும் ஒருவருடன் இருக்க விரும்புவதாகக் கூறினார்.
மேலும் அந்தப் பேட்டியில், " நான் விரும்பும் நபரிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு காரணம் இதற்கு முன் நான் சந்தித்த சில நபர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.