அந்தரங்க வீடியோ விவகாரம்.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஓவியா.. உண்மையில் நடந்தது என்ன? குற்றவாளி சிக்குவாரா?
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், அந்த விவகாரம் குறித்து ஓவியா திரிச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், மலையாள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இந்நிலையில், ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி, இந்திய அளவில் இவர் ட்ரெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகை ஓவியா திரச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஓவியா தாரிக் என்ற நபருடன் நட்பில் இருந்ததாகவும், பின் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரிடமிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தாரிக் மார்பிங் செய்த வீடியோ ஒன்றை நடிகை ஓவியாவுடன் தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், தாரிக்கிடம் பல பெண்களின் வீடியோக்களும், மார்பிங் புகைப்படங்களும் உள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
களவாணி ஓவியா
தமிழ் சினிமாவில் நடிகர் விமலின் ஜோடியாக களவாணி டத்தில் நடித்து, தனது அப்பாவித்தனமான முகத்தால் மக்கள் மனதில் அமர்ந்தவர் ஓவியா. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினாவில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.
