நயன்தாரா காதுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்த பிரபல நடிகையின் பெயர்.. அப்புறம் நடந்த கதையே வேற.. நயன்தாரா ஷேரிங்ஸ்
நடிகை நயன்தாரா, தனக்கு சினிமாவில் மிகவும் இன்ஸ்பிரேஷனலாக இருந்த நடிகை பற்றியும் அவர் எப்படி தனக்கு இன்ஸ்பிரேஷன் ஆனார் என்றும் கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன், டெஸ்ட் படம் குறித்த நெட்பிளிக்ஸுடனான உரையாடல் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா பங்கேற்றார். அப்போது அவர் தான் சினிமாவிற்கு வருவதற்கு முன் ஒரு நடிகையின் பெயரை கேட்டு கேட்டு இன்ஸ்பிரேஷன் ஆனதாக கூறியிருக்கிறார். அந்த நடிகை யார் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
நயன்தாரா, காதுகளில் தினம் ஒலித்த, ஒரு நடிகையின் செய்திகளை கேட்டு கேட்டு இன்ஸ்பிரேஷனாக மாறிய நடிகை வேறு யாருமில்லை அவர் மீரா ஜாஸ்மின் தான். இவர் டெஸ்ட் படத்தில் நயன்தாராவுடன் இணைந்தும் நடித்துள்ளார். அவர் குறித்து தான் நயன்தாரா புகழ்ந்து பேசி இருக்கிறார்.
எங்க பாத்தாலும் மீரா ஜாஸ்மின் பேச்சு
நயன்தாரா, மீரா ஜாஸ்மின் பற்றி பேசுகையில், நான் காலேஜ் படிக்கும் போது மீரா ஜாஸ்மின் பத்தின பேச்சு தான் எங்க பாத்தாலும் இருக்கும். அவங்களோட ரிலேட்டிவ் பொன்னு என்னோட கிளாஸ்மெட். என் கூடவே உக்காந்திருப்பாங்க. எப்போ பாத்தாலும் மீரா ஜாஸ்மின் ஸ்விட்சர்லாந்துல இருக்காங்க, சாங் ஷூட்டிங்ல நடிச்சிட்டு இருக்காங்க. அது இதுன்னு டெய்லியும் எதாவது சொல்லிட்டு அப்டேட் தந்துட்டே இருப்பா.
என் காதுல அவங்க பேர் கேட்காத நாளே இல்ல
எனக்கு இதை எல்லாம் கேக்கும் போது ரொம்பவே பிரம்மிப்பா இருக்கும். நான் 2002 ஆம் ஆண்டு சினிமாவுல காலடி வச்ச தமயத்துல மீரா ஜாஸ்மின் மிகவும் பிரபலமாகிட்டாங்க. அவங்களோட பேர் என்னோட காதுல விழாத நாளே கிடையாது. இந்த வகையில எனக்குள்ள ஒரு தூண்டுதல ஏற்படுத்தின நபரா மீரா ஜாஸ்மின் உருமாறி இருந்தாங்க என அவர் பேசி இருக்கிறார். என்னோட வளர்ச்சிக்கு அவங்களும் ஒரு காரணமா மாறிட்டாங்க என்றார்.
பார்த்துக் கொண்டதே இல்லை
மீரா ஜாஸ்மின் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா என்ற ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதும் உண்மை. என்ன தான் ஒரே ஊர், ஒரே கல்லூரியை சேர்ந்தவர்கள் என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதே இல்லையாம். சினிமாலில் பிரபலமான சமயத்தில் கூட இவர்கள் சந்தித்துக் கொண்டது கிடையாது என்றும் கூறி இருக்கிறார். இவர்கள் தற்போது தான் டெஸ்ட் படத்தின் மூலம் சந்தித்து உள்ளனர்.
மீரா ஜாஸ்மின்
மீரா ஜாஸ்மின் 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின், இவர் 2002 ஆம் ஆண்டே தமிழில் வெளியான ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதையுடுத்து தமிழில் பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆய்த எழுத்து, சண்டக்கோழி. நேபாளி போன்ற படங்களில் நடித்தார். பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த மீரா ஜாஸ்மின் சசிகாந்த் இயக்கத்தில் வெளியான டெஸ்ட் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
நயன்தாரா
நடிகை நயன்தாரா 2003 ஆம் ஆண்டு வெளியான மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். பின் 2005 ஆம் ஆண்டு தமிழில் ஐயா படத்தில் நடித்து அறிமுகமானார். தற்போது அவர் அடுத்தடுத்த ஹிட் கொடுத்து தற்போது கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
