‘நான் அவர கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம்.. என்னால எவ்ளோ கஷ்டம்.. ’ வருந்திய நயன்தாரா
நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம் என பலமுறை யோசித்திருப்பதாக கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, பலரும் விக்னேஷ் சிவனை கிண்டல் செய்து வந்தனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் அவரது திருமணம் குறித்த ஆவணப்படத்தில் கூட கூறியிருப்பார்.
கல்யாணத்தால் கிண்டலுக்கு உள்ளான விக்கி
நான் நயன்தாராவை திருமணம் செய்தபோது நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு தான் கிடைக்கும் என எல்லாம் கிண்டல் செய்ததாக கூறி இருப்பார். அத்துடன், நயன்தாராவின் கணவர் என்பதால் தான் அவருக்கு இத்தனை பேரும் புகழும் கிடைத்ததுடன், பட வாய்ப்புகளும் கிடைப்பதாக பலரும் கூறி வந்தனர்.
கல்யாணம் செய்திருக்கவே கூடாது
இந்நிலையில், நயன்தாரா தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாமோ என யோசித்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், நான் பல நேரங்களில் விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்யாமல் இருந்திருக்கலாம். நாங்கள் ஒன்றாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.