Nayanthara Dhanush case: நயன்தாரா- தனுஷ் வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்.. பரபரப்பில் தமிழ் சினிமா!
நடிகை நயன்தாராவிற்கு எதிராக உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய நடிகர் தனுஷுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வழக்கின் இறுதி விசாரணையை ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நானும் ரவுடி தான்' படப்பிடிப்பு காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக நெட் பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோருக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர வொண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வேண்டுகோள் படி வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால், தனுஷ் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பிடம் இருந்து 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த இந்த வழக்கு வரும் ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
தனுஷ் வக்கீல் நோட்டீஸ்
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.