Actress Kiran: ‘கிளாமரா போட்டோ போட்ட படுக்க வரணுமா..? இரவெல்லாம் போன் ஒரே கால்ஸ்; வில்லன் கிரண் வேதனை!
என்னுடைய காதல் மோசமான நிலைக்கு சென்று விட்டது. டாக்ஸிக்காக மாறிவிட்டது. இதனால் நான் அந்த உறவில் இருந்து வெளியே வர முடிவு செய்தேன். மீண்டும் சென்னைக்கு வந்தேன்.

நடிகை கிரண்
பிரபல நடிகையான கிரண் தன்னுடைய வாழ்க்கையின் கருப்பு பக்கத்தை அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான் என்னுடைய காதலனை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவுடன்,படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். இவ்வளவு ஏன்?..அஜித் படத்தில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.
ஆனால் அதையும் நான் நிராகரித்தேன். காரணம் நான் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்து இருந்தேன். ஆனால் என்னுடைய காதல் மோசமான நிலைக்கு சென்று விட்டது. டாக்ஸிக்காக மாறிவிட்டது. இதனால் நான் அந்த உறவில் இருந்து வெளியே வர முடிவு செய்தேன். மீண்டும் சென்னைக்கு வந்தேன்.
