மருத்துவமனையில் கியாரா அத்வானி? ஷங்கர் பட நாயகிக்கு என்ன ஆனது? தீயாய் பரவும் தகவல்..
கேம் சேஞ்சர் படத்தின் கதாநாயகியான கியாரா அத்வானி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்காத கியாரா அத்வானி
இதையடுத்து இந்த படத்தின் பிரமாண்ட வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 4) மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகை கியாரா அத்வானி பங்கேற்கவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கியாரா அத்வானியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பினர்,
கியாரா அத்வானிக்கு என்ன ஆச்சு?
மும்பையில் நடைபெற்ற தனது கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் கியாரா கலந்து கொள்ளவிருந்தார். ஆனால், அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அப்போது, பட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளர் கியாரா அத்வானிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
விளக்கமளித்த சினிமா வட்டாரம்
இதையடுத்து, நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எல்லாம் கியாரா அத்வானி பற்றி விசாரித்து வந்தனர். அப்போது, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கியாராவின் உடல்நிலை குறித்து விளக்கமளித்தனர். அப்போது, கியாரா அத்வானி தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால், ஓய்வின்றி காணப்படுகிறார். அதனால் அவரை மருத்துவர்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு கூறினர். அதனால் தான் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவர் மருத்துமனையில் எல்லாம் அனுமதிக்கப் படவில்லை என்றனர்.
அரசியலை மையப்படுத்திய கேம் சேஞ்சர்
கேம் சேஞ்சர் படத்தின் டீசரை லக்னோவில் படக்குழு வெளியிட்டது. ஒரு நிமிடத்திற்கும் மேலான டீசரில் ராம் சரண் அதிரடி ஆக்ஷனில் கலக்கினார். அந்தக் காட்சியில், அவர் ரவுடிகளுடன் சண்டையிட்டதுடன் கியாரா அத்வானியுடன் காதலிலும் கலக்கினார்.
இந்தப் படம் அரசியல் உலகை மையமாகக் கொண்டது என்றும், ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து நியாயமான தேர்தலுக்காகப் போராடும் ஒரு இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியின் கதையைச் சுற்றி வருகிறது என்றும் கூறப்படுகிறது. டைரக்டர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.
கியாராவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி
கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்தார். இவர் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஷெர்ஷா எனும் படத்தில் ஒன்றாக நடிக்கும் போது காதல் வயப்பட்டனர்.
டாபிக்ஸ்