Khushbu Sundar: என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.. கண்ணு வச்சிடாதீங்க.. கண்ணில் சந்தோஷம் பொங்க பேசிய குஷ்பு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Khushbu Sundar: என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.. கண்ணு வச்சிடாதீங்க.. கண்ணில் சந்தோஷம் பொங்க பேசிய குஷ்பு

Khushbu Sundar: என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.. கண்ணு வச்சிடாதீங்க.. கண்ணில் சந்தோஷம் பொங்க பேசிய குஷ்பு

Malavica Natarajan HT Tamil
Published Jan 12, 2025 12:44 PM IST

Khushbu Sundar: மதகஜராஜா படத்திற்கு கிடைத்த வரவேற்பால் என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும். வேற என்னங்க சொல்றது என கண்ணில் சந்தோஷம் பொங்க பேசியுள்ளார் நடிகை குஷ்பு.

Khushbu Sundar: என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.. கண்ணு வச்சிடாதீங்க.. கண்ணில் சந்தோஷம் பொங்க பேசிய குஷ்பு
Khushbu Sundar: என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.. கண்ணு வச்சிடாதீங்க.. கண்ணில் சந்தோஷம் பொங்க பேசிய குஷ்பு

வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், நிதின் சத்யா, மணிவண்ணன், மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோர் நடித்த இந்தத் திரைப்படம் தயாரிப்பாளர் தரப்பிற்கு ஏற்பட்ட பிரச்சனையால் வெளிவராமலே இருந்தது.

12 ஆண்டுக்கு பின் வைப் ஏற்றிய படம்

இருப்பினும் இந்தப் படத்திற்கும், விஷால் பாடிய பாடலுக்கும் வைப் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்தது. இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. இதனால், 12 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

பரிதாப நிலையில் விஷால்

இதையடுத்து படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற நடிகர் விஷால் கை நடுக்கத்துடனும் பேச முடியாமல் நிற்கவும் முடியாமலும் மிகவும் அவதிப்பட்டார். இதைப் பார்த்த பலரும் விஷாலுக்கா இந்த நிலைமை என அவர் மீது பரிதாபப்பட்டனர்.

விளக்கமளித்த விஷால்

இன்று மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகஉள்ள நிலையில், நேற்று படத்தின் ப்ரிவியூ ஷோ போடப்பட்டது. அப்போது அங்கு வந்த விஷால் பத்திரிகையாளர்களையும் ரசிகர்களையும் சந்தித்து பேசினார்.

அப்போது, "எல்லோருக்கும் வணக்கம். 12 வருஷம் கழிச்சு 12ஆம் தேதியே படம் வெளியாகுது.

இது 12 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற படம் மாதிரியே தெரியல.புதுப்படம் மாதிர இருக்கு. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். எல்லோரும் நல்லபடியா குடும்பத்துடன் சந்தேஷமா கொண்டாடுங்க. முக்கிய இந்த படத்த பத்தி சொல்றதை விட இன்னொரு விஷயத்தை சொல்ல விரும்புறேன்.

எனது உடல்நிலையில் எந்த பிரச்சினையும் இல்ல

தமிழ்நாடு மட்டுமல்ல கனடாவில் இருந்து கூட எனக்கு போன் கால் வந்தது. நான் அப்போலோவில் அட்மிட் ஆகியிருக்கேன்னு என் உடலநிலை குறித்து தப்பான தகவல்கள் வெளிவந்தது. அப்படிலாம் ஒன்னும் இல்லை.

எனக்கு கடுமையான காய்ச்சல் தான். அன்னைக்கு என்னால முடியல. ஆனாலும் இத்தனை வருஷம் கழித்து படம் வருது. சுந்தர் சி சார் முகம் பார்க்கனும், அந்த பங்கஷனை மிஸ் செய்ய கூடாதுன்னு எப்படியாவது முடிஞ்ச அளவு அட்டெண்ட் செஞ்சேன்.

எனது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. நண்பர்கள், பேன்ஸ் என எல்லோரும் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அனைவருக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன். நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

கண்ணு வச்சிடாதீங்க

12 வருடங்களுக்குப் பிறகு மதகஜராஜா படம் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி என்ன நினைக்குறீங்க என பத்திரிகையாளர்கள் இயக்குநர் சுந்தர்.சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவிடம் கேள்வி எழுப்பினர்,

இதற்கு பதிலளித்த குஷ்பு, "முதல்ல என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும். அதத் தவிர வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல. நீங்க கண்ணு வச்சிடாதீங்க.

ஆடியன்ஸ் பல்ஸ் பிடிச்சிட்டாரு

எனக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஆனா இந்தப் படத்துக்காக அவரு 12 வருஷம் முன்னாடி எப்படி எல்லாம் உழைச்சாருன்னு தெரியும். அதுக்காக நீங்க இத்தனை வருஷம் கழிச்சும் இவ்ளோ பெரிய வரவேற்பு கொடுத்துருக்கீங்க.

ஒரு படம் எடுத்து 12 வருஷம் ஆன மாதிரியே இல்ல. இப்போ தான் எடுத்த மாதிரி இருக்கு. அவரு ஆடியன்ஸ் பல்ஸ் பிடிச்சிட்டாரு. சும்மா சொல்றாங்க சுந்தர்.சி என்டெர்டெயினர் கிங்ன்னு. அவரு அதை மறுபடியும் மறுபடியும் நிரூபிச்சிட்டே இருக்காரு.

சந்தோஷத்துல தூங்கிடுவாரு

முதல்ல வீட்டுக்குப் போயி் எங்க அத்தை கிட்ட சுத்தி போட சொல்லனும். இனிமேலாவது அவரு தூங்கனும். நிச்சமயம் இன்னைக்கு படம் ரிலீஸ் ஆன சந்தோஷத்துலயே அவரு தூங்கிடுவாரு" என கண்களில் சந்தோஷம் பொங்க கூறி இருக்கிறார்.