kangana Ranaut: ஒத்த படத்துக்காக சொத்தை வித்த நடிகை! சுத்தி சுத்தி அடித்த துயரம்.. கங்கனா பகிர்ந்த சோகம்..
எமர்ஜென்சி திரைப்படத்தை மக்கள் பார்வைக்கு கொண்டும் வரும் முன் இத்தனை தடைகளையும் துயரத்தையும் சந்தேப்பேன் என நினைக்கவில்லை என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிக்கு பரிட்சையமானவர் கங்கனா ரணாவத். இவர் தன் அசைக்க முடியாத நடிப்புத் திறமையால் பாலிவுட்டின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரானார்.
இயக்குநர் அவதாரம்
இதையடுத்து, படம் நடிப்பதுடன் அதனை இயக்கவும் எண்ணி, மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கியுள்ளார் கங்கனா. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாப்பாத்திரத்திலும் இவரே நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து வெகுநாட்கள் ஆகியும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால், திரைக்கு வராமலே இருந்தது. இதையடுத்து தற்போது பிரச்சனைகள் எல்லாம் சுமூகமாக முடிக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 17ம் தேதி எமர்ஜென்சி திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
எமர்ஜென்சி சந்தித்த பிரச்சனைகள்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் மத நம்பிக்கை குலைக்கும் விதமாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும், குறிப்பாக சீக்கியர்கள் குறித்து தவறான சித்தரிப்புகள் உள்ளதாகக் கூறி தணிக்கை வாரியம் 13 இடங்களில் திருத்தம் கூறியுள்ளது.
இவரைப் போன்றே தணிக்கை வாரியமும் திட்டவட்டமா இருப்பதால், கங்கனா ரணாவத் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து, படத்தை வெளியிட உத்தரவிடுமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கரார் காட்டிய தணிக்கை வாரியம்
இதற்கு பதிலளித்த, தணிக்கை வாரியம், எமர்ஜென்சி படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் 13 இடங்களில் திருத்தம் செய்யுமாறு கேட்டுள்ளோம். அதில், 4 இடங்களில் காட்சிகளை வெட்டுமாறும், 3 இடங்களில் திருத்தம் செய்யுமாறும் 6 இடங்களில் புதிய. காட்சிகளை சேர்க்குமாறும் தெரிவித்துள்ளோம்.
குறிப்பாக சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சியை அகற்றுமாறு கூறியுள்ளோம். அதை படக்குழு செய்ய மறுக்கிறது. ஒருவேளை படக்குழு அந்தத் திருத்தங்களை செய்தால் எமர்ஜென்சி படத்திற்கு யு. ஏ. சான்று வழங்கப்படும் என காரராக பேசியதால் அதன் முடிவுக்கு கங்கனா பணிந்தார்.
கங்கனா சந்தித்த சவால்கள்
கடந்த ஆண்டு, எமர்ஜென்சி படம் பல தடைகளைச் சந்தித்தது. இந்தப் படத்தை உருவாக்கும் போது கடினமான காலங்களைச் சந்திப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஸ்டுடியோக்களுடனும், பணத்திற்காகவும் அனுமதிக்காகவும் மிகவும் போராட வேண்டியிருந்தது.
இது எளிதான பயணம் அல்ல. பல கஷ்டங்கள் நிறைந்தது. இந்தப் படத்தை பல சமூகங்களுக்குக் காட்ட வேண்டியிருந்தது. எங்கள் படம் ஒவ்வொரு விஷயத்திலும் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. அத்தகைய அனைத்துத் தடைகளையும் கடந்து, இறுதியாக படத்தை திரையிட வந்துள்ளோம்.
நம்பிக்கை எல்லாம் போய்விட்டது
எனக்கு நாடு, நாட்டின் அரசியலமைப்பு, மற்றும் தணிக்கை வாரியத்தின் மீது நிறைய நம்பிக்கை உள்ளது. இதுதான் இன்று எங்கள் படத்தை பார்வையாளர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது. படத்தை உலகுக்குக் காட்ட ஆவலுடன் காத்திருக்கிறோம்,"
பொதுவாக, என்னுடைய படங்கள் மிகவும் வசதியான பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் இந்த முறை நான் நிறைய சிரமங்களைச் சந்தித்தேன். இதற்காக என் வீட்டையே விற்பேன் என நினைக்கவில்லை. மேலும், படத்தின் வெளியீட்டின் தாமதம் அனைவரின் நம்பிக்கையையும் தகர்த்து எரிந்தது. எப்போது படம் வெளியாகும் என்ற கேள்வி மட்டும் தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது என ஏஎன்ஐ செய்திக்கு பேட்டி அளித்துள்ளார் கங்கனா ரணாவத்.
டாபிக்ஸ்