ஹன்சிகா மதுரை விசிட்! மும்பையில பிறந்தாலும் நான் தமிழ் பொண்ணு தான்! இன்ஸ்டாவில் ஹேப்பி போஸ்ட்!
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி, இவர் தமிழில் முதன் முதலாக தனுஷ் உடன் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஹன்ஸிகா மோத்வானி, இவர் தமிழில் முதன் முதலாக தனுஷ் உடன் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா உள்பட பலருடன் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று (அக்- 6 ) மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று உள்ளார். அங்கு உள்ள ஹோட்டலிலும் சாப்பிட்டு உள்ளார்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு
நடிகை ஹன்ஸிகாவிற்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருந்து வருகிறது. பல புனித கோவில்களுக்கு செல்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் ஒரு படம் ஆரம்பிக்கும் முன்னும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவார். இந்நிலையில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தனது அம்மாவுடன் சென்று வழிபாடு நடத்தினர். மேலும் ஹன்ஸிகா வந்ததை அடுத்து கோயிலுக்கு அவரை ரசிகர் பட்டாளம் சூழ்ந்து கொண்டு வரவேற்றனர் இவர்கள் வழிபடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் பொண்ணுங்க நான்
தனது மதுரை விசிட் குறித்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் “மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான்.நம்ம ஊரு சாப்பாடு” எனத் தமிழில் பதிவு செய்துள்ளார். ஹன்சிகா மற்ற மொழி படங்களைக் காட்டிலும் தமிழில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமான காலத்திற்கும், தற்போதும் அவரது தமிழும் நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக தற்போது வரும் பல பேட்டிகளில் ஹன்சிகா சரளமாக தமிழ் பேசி வருகிறார். மேலும் இவரது அரண்மனை திரைப்படம் பல குட்டீஸ் குழந்தைகளும் இவரை விரும்ப வழி வகுத்தது. இதன் வாயிலாக மும்பையில் பிறந்தாலும் தமிழ் எனும் உணர்வால் தான் தமிழ் பெண்ணாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.