Actress Devayani: 'இது என்னோட வலிக்கு கிடைச்ச விருது.. ரொம்ப பெருமையா இருக்கு'- தேவயானி
Actress Devayani: என் வாழ்வில் நடந்த வலி மிகுந்த நிகழ்வுகளை வெளிப்படுத்திய தருணங்களைத் தான் திரைப்படமாக இயக்கினேன் என நடிகை தேவயானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Actress Devayani: தமிழ் மக்களுக்கு மிகவும் பரிட்சையமான நடிகை தேவயானி. திருமணத்திற்கு பின் அதிகம் படம் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்த இவர், பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இப்போது அவர் இயக்கிய குறும்படம் ஒன்று சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.
இயக்குநராக விருது பெற்ற தேவயானி
கைக்குட்டை ராணி என்ற பெயரில் அவர் இயக்கிய குறும்படம் மூலம் தேவயானி கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் அடி எடுத்து வைத்துள்ளார். 20 நிமிடங்கள் கொண்ட இந்த கைக்குட்டை ராணி திரைப்படம் குழந்தைகளின் உணர்வுகளை மையப்படுத்தி எடுத்ததற்காக 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகளின் குறும்பட விருதை பெற்றுள்ளது.
டைரக்ஷன் மேல ஆசை
இந்நிலையில், இந்த குறும்படம் உருவாக்க ஆரம்பித்தது முதல், இயக்கி வெளியிட்டது வரையிலான பயணத்தை எஸ்எஸ் மியூசிக் யூடியூபிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், " இத்தன வருஷமா சினிமாவுல படம் நடிச்சிருக்கேன். நிறைய நல்ல நல்ல டைரக்டர் கூட வேலை செஞ்சிருக்கேன். என்னோட ஹஸ்பெண்ட் கூட டைரக்டர் தான். அதுனால டைரக்ஷன் மேலயும் கொஞ்சம் ஆசை இருந்தது. சரி இதையும் செஞ்சு பாத்திடலாம்ன்னு நினைச்சேன்.
என் சொந்த வாழ்க்கையில் நடந்த கதை
அந்த ஆர்வத்துல தான் நான் இந்தக் கதையவே எழுத ஆரம்பிச்சேன். இந்தக் கதை என்னோட சொந்த வாழ்க்கையில நடந்த விஷயத்த வச்சி தான் நான் எழுதுனேன். இந்தப் படத்துக்கான ஒன் லைன், கதை எல்லாம் ரெடி பண்ணிட்டு இத நான் என் ஹஸ்பெண்ட் கிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு ஒரு தயக்கத்துலயே இருந்தேன். அப்புறம் எப்படியும் அதை அவர்கிட்ட சொல்லி தான் ஆகணும்ன்னு ஒரு தயக்கத்துலயே என்னை தயார் பண்ணிட்டு அவர்கிட்ட போய் சொன்னேன்.
கணவர் தைரியம் கொடுத்தாரு
கதைய அவர் படிச்சிட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாரு. அதுமட்டும் இல்லாம இந்த கதை உன்னோட வாழ்க்கையில நடந்த உண்மையான சம்பவத்த வச்சி எழுதுனதால இது இன்னும் உணர்வுபூர்வமா இருக்கும்ன்னு அவர் என்ன பாராட்டினாரு. அதுக்கு அப்புறம் இந்தப் படத்த தைரியமா பண்ணுன்னு சொன்னாரு.
இந்தக் கதை ஒரு 6 வயசு பொன்னு, அம்மாவை இழந்து, வெளியூர்ல வேலை செய்யுற அப்பாவுக்காக ஏங்குறத பத்தின கதை. இது என்னோட வாழ்க்கையில நடந்நதது.
என்னோட வலி இருக்கு
எங்க அப்பா நான் 6 வயசு இருக்கும் போது வேலைக்காக சவுதி போயிட்டாரு. அவர் எப்போ வருவார்ன்னு மாசக் கணக்கா, வருஷக் கணக்கா காத்திட்டு இருப்பேன். அப்போ அம்மா இருந்தாங்க. அம்மா இருந்தாலும் நான் அப்பாக்காக மிஸ் பண்ணேன். அந்த வலி எல்லாம் இந்தக் கதையில இருக்கும் என்றார்.
பெருமையா இருக்கு
முன்னதாக, நடிகை தேவயானி இயக்கிய கைக்குட்டை ராணி படத்திற்கு சர்வதேச விருது கிடைத்த சமயத்தில், எத்தனையோ படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், முதல்முறையாக நான் இயக்கிய ஒரு குறும்படம் விருது பெறுவது பெரும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என்றார். மேலும், இந்த குறும்படத்தை இன்னும் பல சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பவும் முயற்சி செய்யப் போவதாக கூறி இருந்தார்.
கைக்குட்டை ராணி
இந்த கைக்குட்டை ராணி படத்திற்கு, இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார் மற்றும் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன்.என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்