'நான் அந்த படம் பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவ்ளோ அழகான பாட்ட கொடுத்தாங்க' நடிகை தேவையானி
நான் படமே பண்ண மாட்டேன்னு சொன்னேன். ஆனா என்ன கம்பெல் பண்ணி நடிக்க வச்சு, அந்த படத்துல அழகான பாட்டையும் கொடுத்தாங்க என நடிகை தேவையானி தான் நடித்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

'நான் அந்த படம் பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவ்ளோ அழகான பாட்ட கொடுத்தாங்க' நடிகை தேவையானி
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவரான தேவையானி, தான் நடித்த திரைப்படங்கள் குறித்து கலாட்டா மீடியாவிற்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது, தான் நியூ படத்தில் நடித்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார்.
படத்தில் நடிக்க தயங்கினேன்
அப்போது, நியூ படத்தை நான் முதலில் தெலுங்கில் தான் நடித்தேன். மகேஷ் பாபு தான் எஸ்.ஜே.சூர்யா சாரின் ரோலில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் என்னை நடிக்க வைக்க என் கால்ஷீட் கேட்டு வந்தாங்க. ஆனா நான் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன். அந்த டைம்ல நான் நிறைய படத்துல ஹீரோயினா பண்ணிட்டு இருந்தேன். அந்த சமயத்துல நான் ஹீரோவுக்கு அம்மாவ பண்ணனும்ன்னா அது எப்படி இருக்கும்ன்னு தெரியல என்றார்.