'கனவில் தோன்றி அம்மன் சொன்னதால் இதைச்செய்தேன்’: முழு ஆன்மிகவாதியாக மாறிய நடிகை புவனேஸ்வரி பேட்டி!
'நாம் இவ்வளவு நாள் எதுக்காகப் பிறந்தோம், எதுக்காக இருந்தோம்ன்னு அதற்கான பலன் வந்து, இந்த கோயிலுக்கு வந்ததுக்குப் பின் தெரிஞ்சது’ என நடிகை புவனேஸ்வரி ஆன்மிகவாதியாக மாறியபின் பேட்டியளித்திருக்கிறார்.

'கனவில் தோன்றி அம்மன் சொன்னதால் இதைச்செய்தேன்’: முழு ஆன்மிகவாதியாக மாறிய நடிகை புவனேஸ்வரி பேட்டி!
தன் கனவில் அம்மன் தோன்றி இதை செய்யச் சொன்னதாகவும், அதனால், தான் தாராபுரத்தில் வந்து தங்கி இருப்பதாகவும் முழு ஆன்மிகவாதியாக மாறிய நடிகை புவனேஸ்வரி பரபரப்பு பேட்டியளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக நடிகை புவனேஸ்வரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’நான் வந்து நடிகை புவனேஸ்வரி. என்ன நீங்க சினிமாவில் சின்னத்திரையில் எல்லாம் பார்த்திருப்பீங்க. இப்ப நான் இருக்கிறது ஆன்மிகம். நான் ஆன்மிகத்துக்கு வந்து 20 வருஷம் ஆகுது.
ஆனால், அது வெளியில் தெரியாது. நான் ஆன்மிகத்தில் இருக்கும்போதே நடிச்சிட்டும் இருந்தேன். தெலுங்கு, தமிழ் மொழிகள் எல்லாத்திலும் நடிச்சிட்டுத்தான் இருந்தேன். ஆனால், நான் இப்போது இருக்கிறது திருப்பூர் பக்கத்தில் இருக்கிற தாராபுரத்தில் தான்.