'கனவில் தோன்றி அம்மன் சொன்னதால் இதைச்செய்தேன்’: முழு ஆன்மிகவாதியாக மாறிய நடிகை புவனேஸ்வரி பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'கனவில் தோன்றி அம்மன் சொன்னதால் இதைச்செய்தேன்’: முழு ஆன்மிகவாதியாக மாறிய நடிகை புவனேஸ்வரி பேட்டி!

'கனவில் தோன்றி அம்மன் சொன்னதால் இதைச்செய்தேன்’: முழு ஆன்மிகவாதியாக மாறிய நடிகை புவனேஸ்வரி பேட்டி!

Marimuthu M HT Tamil Published May 08, 2025 02:53 PM IST
Marimuthu M HT Tamil
Published May 08, 2025 02:53 PM IST

'நாம் இவ்வளவு நாள் எதுக்காகப் பிறந்தோம், எதுக்காக இருந்தோம்ன்னு அதற்கான பலன் வந்து, இந்த கோயிலுக்கு வந்ததுக்குப் பின் தெரிஞ்சது’ என நடிகை புவனேஸ்வரி ஆன்மிகவாதியாக மாறியபின் பேட்டியளித்திருக்கிறார்.

'கனவில் தோன்றி அம்மன் சொன்னதால் இதைச்செய்தேன்’: முழு ஆன்மிகவாதியாக மாறிய நடிகை புவனேஸ்வரி பேட்டி!
'கனவில் தோன்றி அம்மன் சொன்னதால் இதைச்செய்தேன்’: முழு ஆன்மிகவாதியாக மாறிய நடிகை புவனேஸ்வரி பேட்டி!

இதுதொடர்பாக நடிகை புவனேஸ்வரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’நான் வந்து நடிகை புவனேஸ்வரி. என்ன நீங்க சினிமாவில் சின்னத்திரையில் எல்லாம் பார்த்திருப்பீங்க. இப்ப நான் இருக்கிறது ஆன்மிகம். நான் ஆன்மிகத்துக்கு வந்து 20 வருஷம் ஆகுது.

ஆனால், அது வெளியில் தெரியாது. நான் ஆன்மிகத்தில் இருக்கும்போதே நடிச்சிட்டும் இருந்தேன். தெலுங்கு, தமிழ் மொழிகள் எல்லாத்திலும் நடிச்சிட்டுத்தான் இருந்தேன். ஆனால், நான் இப்போது இருக்கிறது திருப்பூர் பக்கத்தில் இருக்கிற தாராபுரத்தில் தான்.

கனவில் தோன்றிய காளிதேவி:

இங்கே நான் வந்தது எப்படி என்றால், எட்டு வருஷத்துக்கு முன் கனவிலே, இந்த இடத்துக்கு வரச்சொல்லி காளிதேவி இந்த இடத்தைக் காட்டிட்டு காட்டிட்டு வந்தாங்க. எந்த இடம் என்றே தெரியல.

நானும் வந்து எட்டு வருஷமாக, காளியைத் தேடி அலைஞ்சிட்டே இருந்தேன். கடைசியில் திருப்பூர் தாராபுரத்தில் இங்கு வந்து தான் பார்த்தேன். அந்த அம்பாள் வந்து, தத்ரூபமாக, நான் என்ன கனவில் பார்த்தேனோ, என்ன என் கனவில் தெரிஞ்சதோ, அது வந்து இங்கே இருந்தது.

வேறு ஒன்னுமே தெரியல. நாம் இவ்வளவு நாள் எதுக்காகப் பிறந்தோம், எதுக்காக இருந்தோம்ன்னு அதற்கான பலன் வந்து, இந்த கோயிலுக்கு வந்ததுக்குப் பின் தெரிஞ்சது.

அதற்கப்புறம், எதற்காக, இங்கு வரவழைச்சாங்கன்னு பார்த்தால், இது வந்து பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட ஸ்தலம். இங்கு தாராபுரத்துக்கு முன்னாடி வந்து, விராடபுரம் என்னும் பழைய பெயர் இருந்ததாகச் சொல்லிட்டு, இந்த ஊருடைய பெயர் இருந்ததாகவும், இங்கு வந்து பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞான வாசம் இருந்ததாகவும் அப்போது, இந்த காளியை வணங்கியதாகவும், சொன்னாங்க. இது அம்பாள் என் கனவில் தோன்றி சொன்ன விஷயம்.

அகஸ்தியருக்கு உதவிய காளிதேவி:

இரண்டாவது, இந்த அம்பாள் வந்து, எப்படி இங்கே வந்தாங்கன்னு கேட்கும்போது, அகஸ்திய மாமுனிவர் இங்கு வந்து கோயிலுக்கு, சிவனுக்காக வழிபட்ட ஸ்தலம். அகஸ்திய மாமுனிவர் அமராவதி கரையில் உட்கார்ந்து தியானம் பண்ணியிருக்கார்.

அப்போது நிறைய அசுரர்கள் அகஸ்திய முனிவரை தொந்தரவு செய்திருப்பாங்க. அப்போது, அகஸ்தியர் இந்த அம்மாவை அழைச்சிருக்கார். ஏனென்றால், இந்த அம்மாவுக்கும் அகஸ்தியருக்கும் நிறைய நட்பு இருக்கிறது.

அகஸ்தியர் கூப்பிட்டால், இந்த காளியம்மாளுக்கு ஒரு மகத்துவமான பந்தம் இருக்கு. அகஸ்தியர் கூப்பிட்டு, சிவனை வழிபடவிடாமல் பண்றாங்கன்னு, காளி தேவியிடம் சொல்லி வேதனைப்படுகிறார்.

அடுத்து அகஸ்தியர் கூப்பிட்டதால், காளி தேவி அம்மா வந்து, அழிச்சிட்டு, இந்த இடத்தில் வந்து உட்கார்ந்து இருக்காங்க. மேலும், இந்த சுற்றுப்பகுதியில் இருக்கிற பக்தர்களுக்கு, யுகம் யுகமாக தரிசனம் கொடுத்திட்டு இருக்காங்க. எத்தனை வருஷமாக இருக்காங்கன்னு தெரியாது.

என் கனவில் வந்த அம்மனை 8 வருஷமாகத் தேடி, தேடி இருந்து கடைசியாக ஒரு நான்கு மாதமாக, தாராபுரம் என்னும் விராடபுரம் கிராமத்தில் வந்து இருக்கேன்’’ என நடிகை புவனேஸ்வரி பேட்டியளித்திருக்கிறார்.