Lokesh Kanagaraj: கதை எழுத போதும் மட்டும் சாருக்கு ரொமன்ஸ்.. - லோகேஷ் கனகராஜை கலாய்த்த ஆண்ட்ரியா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lokesh Kanagaraj: கதை எழுத போதும் மட்டும் சாருக்கு ரொமன்ஸ்.. - லோகேஷ் கனகராஜை கலாய்த்த ஆண்ட்ரியா!

Lokesh Kanagaraj: கதை எழுத போதும் மட்டும் சாருக்கு ரொமன்ஸ்.. - லோகேஷ் கனகராஜை கலாய்த்த ஆண்ட்ரியா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 29, 2024 04:37 PM IST

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.இதுதான் கான்செப்ட் என்று அவர் புரிய வைத்தார். நான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்து கூட பார்த்ததில்லை. நடிப்பை ஒரு சவாலாக ஏன் எடுத்து செய்யக்கூடாது என்ற சோனுக்குள்ளும் நான் என்றைக்கும் சென்றது கிடையாது. - லோகேஷ் கனகராஜ்!

நடிகை ஆண்ட்ரியா!
நடிகை ஆண்ட்ரியா!

இது குறித்து கலாட்டா சேனலுக்கு அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “ லோகேஷ் கனகராஜை நான் இனிமேல் மியூசிக் வீடியோவில் பார்த்தேன். அவ்வளவு ரொமான்டிக்காக நடித்திருக்கிறார். ஆனால் கதை எழுதும் பொழுது மட்டும், இந்த ரொமான்ஸ் அவருக்கு வரவில்லையே. இதையும் நான் சொல்லவில்லை கமெண்ட் செக்ஷனில் பதிவிடப்பட்டதைதான் கூறியிருக்கிறேன்.”  என்றார். 

அண்மையில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகிய ‘இனிமேல்’ பாடல் வெளியானது. இதன் மூலம் நடிகராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பேட்டி ஒன்றில் அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய திரைப்படங்களில் காதலுக்கான இடம் கம்மியாக இருப்பதையும், நான் கதாநாயகிகளை கொன்று விடுவதையும் குறிப்பிட்டு, இவர் எப்படி இப்படியான ஒரு ரொமான்டிக் பாடலில் நடித்தார் என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

ஆக்சன் படங்களுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் இருக்கின்றன. ஆகையால் அதன்படிதான் அதை செய்தாக வேண்டும். ஆனால், இனிமேல் பாடல் என்பது எனக்கு உண்மையில் எனக்கு ஆச்சரியம் தான். ஒரு நாள் எனக்கு கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

நான் அவர்கள் வேறு எதற்காகவோ அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். இதனையடுத்து அவர்கள் விஷயத்தை சொன்னார்கள். நான் ஸ்ருதிஹாசனை சந்தித்தேன். அவரை பார்த்த உடனேயே நான் சிரித்து விட்டேன்.

அதன் பின்னர் பாடலை கேட்டேன். கொஞ்சம், கொஞ்சமாக ஏன் இதை முயற்சி செய்து பார்க்க கூடாது என்று தோன்றியது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கமல் ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஏதாவது கேட்டு வந்தால், அதற்கு என்னால் நோ சொல்ல முடியாது.” என்று பேசினார்.

ஸ்ருதிஹாசன் பேசும் பொழுது, “நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருப்பேன். இவர் என்னை கவனித்துக் கொண்டே இருந்தார். கொஞ்சம் விட்டால் இவள் எரிச்சலை கிளப்பி விடுவாள் என்று ஓகே சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்” என்றார்.

இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.இதுதான் கான்செப்ட் என்று அவர் புரிய வைத்தார். நான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்து கூட பார்த்ததில்லை. நடிப்பை ஒரு சவாலாக ஏன் எடுத்து செய்யக்கூடாது என்ற சோனுக்குள்ளும் நான் என்றைக்கும் சென்றது கிடையாது.

அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்தான ஸ்கிரிப்ட் புக் எனக்கு கொடுக்கப்பட்டது. நான் படித்தேன். பாடலின் இயக்குநர் துவாரக்கை சந்தித்தேன். மொத்த குழுவையும் என்னை சந்திக்க வைத்தார்கள்.

தினசரியும் அந்த டைரக்ஷன் டீம் என்னை சந்தித்துக் கொண்டே இருந்தது. நான் மீண்டும் மீண்டும் அவர்களிடம் கேட்டது ‘ஒய் மி’ என்பதுதான். ஷூட் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட, நான் கான்ஃபிடன்ட்டாக இல்லை.

அங்கே சென்று என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த டீமுடன் நான் தினசரி சந்தித்த சந்திப்புகள், எனக்கு ஒரு விதமாக செளகரியமான நிலையை கொடுத்து, இந்த முடிவை எடுக்க வைத்தது. யாரும் காரி துப்பாத அளவிற்கு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்” என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.