இங்கு நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன.. 3 வாரங்களுக்கு பின் பேசிய குஷ்பு.. என்ன நடந்தது?
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கை 3 வாரங்களுக்குப் பின் ஹேக்கர்களிடமிருந்து மீட்டெடுத்துள்ளார்.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் மூன்று வார கால போராட்டத்திற்குப் பிறகு தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கை மீண்டும் பெற்றுள்ளார். கடந்த சில வாரங்களில் 'நிறைய விஷயங்கள்' நடந்துவிட்டதாக கூறிய அவர், மீண்டும் தனது ரசிகர்களுடன் இணைந்து பயணிப்பதில் ஆவலுடன் இருப்பதாக கூறினார். அவர் என்ன சொன்னார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
குஷ்பு சுந்தர் எக்ஸ் தள பதிவு
குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் 'மனமார்ந்த நன்றிகள்' எழுதப்பட்ட பூக்களின் படத்தைப் பதிவிட்டார். அதை பதிவிட்டு, ஹேக்கர்களிடமிருந்து தனது கணக்கை இறுதியாக மீட்டெடுத்ததாக அறிவித்தார், “என் அன்பான நண்பர்களே. இறுதியாக இங்கே திரும்பி வந்துவிட்டேன். 3 வாரங்களுக்குப் பிறகு. உங்களையெல்லாம் மிஸ் பண்ணினேன். இந்த 3 வாரங்களில் நிறைய விஷயங்கள் நடந்துள்ளன. மீண்டும் ஒருமுறை நாம் இணைந்து முன்னேறுவோம். கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களிடமிருந்து மேலும் பல கதைகளை கேட்கவும் காத்திருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் என் அன்புகள்.” எனக் கூறியிருந்தார்.
ஹேக்கிங்கை தடுப்பது எப்படி?
அவர் 3 வாரத்திற்கு பின் மீண்டும் எக்ஸ் தள பக்கத்தை மீட்டதைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர், அவர்களில் ஒருவர், “உங்களை லவ் பண்ணுகிறேன் மேம்” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “நீங்கள் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி மேம்... பல்வேறு தலைப்புகளில் உங்கள் செய்திக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
ஒரு ரசிகர், “நீங்கள் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி! உங்கள் கடவுச்சொல்லை 32 எழுத்துக்களாக மாற்றி, அமைப்புகளில் 2FA பாதுகாப்பைச் செயல்படுத்தவும், இதனால் உங்கள் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்படாது” என்று பரிந்துரைத்தார். சில ரசிகர்கள் அவர் திரும்பி வந்ததில் மகிழ்ச்சியடைந்தனர், ஒருவர் “சிறந்த சகோதரி” என்று கூறினார்.
என்ன நடந்தது?
கடந்த ஏப்ரல் மாதத்தில், குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக வெளிப்படுத்தினார். அவர் தனது ஹேக்கரிடமிருந்து பெற்ற வாட்ஸ்அப் செய்தியையும் அந்தப் பதிவில் பகிர்ந்தார். அந்த செய்தியில், “ஹாய் குஷ்பு. உங்கள் ட்விட்டர் கணக்கை நான் ஹேக் செய்தேன், ஆனால் உங்கள் கணக்கு எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
குஷ்பு புகார்
இந்த செய்தியைப் பதிவிட்ட நடிகை குஷ்பு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார், ஹேக்கர்களிடமிருந்து எனது அலுவலகத்திற்கு இந்த செய்தி வந்தது. இது இங்கிலாந்தில் மறைந்திருக்கும் ஹேக்கர்களின் எண். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீசாரை டேக் செய்து பிரச்சனையை குறிப்பிட்டார்.
சமீபத்தில் சமூக ஊடக கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட பல பிரபலங்களில் குஷ்புவும் ஒருவர். திரிஷா கிருஷ்ணன், லட்சுமி மஞ்சு மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோரும் இதே பிரச்சினையை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
