Ambika: அடுத்தடுத்து தோல்வி.. வடிவேலு கொடுத்த வாய்ப்பு.. கிசுகிசுவில் சிக்கிய அம்பிகா
Actress Ambika: தற்போது மார்க்கெட் குறைந்துவிட்ட காரணத்தினால் அம்பிகா படங்களை தவர்த்துவிட்டார். அதற்கு பதிலாக சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
80ஸ் காலத்தில் தென்னிந்தியத் திரையுலகில் பிஸியான நடிகையாக இருந்தவர் அம்பிகா. சூப்பர் ஸ்டார் படங்களில் கதாநாயகியாக வலம் வரும் அம்பிகாவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஹிட் படங்கள் கிடைத்தன. அப்போது எல்லாம் இவர் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக படங்களில் நடித்து வந்தார்.
மன்னன் மகன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அம்பிகா. அம்பிகாவின் சகோதரி ராதா. தென்னிந்திய திரையுலகில் வெற்றி பெற்ற அம்பிகா மற்றும் ராதா இருவரும் ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து ஒதுங்கினர். அந்தக் காலத்து பெரும்பாலான ஹீரோயின்களுக்கு நடந்தது போல, அம்பிகாவின் மார்க்கெட் மதிப்பு சரிந்தது.
ஆனால் படங்கள் இல்லை என்றாலும் நடிகௌ அம்பிகா பல ஆண்டுகளாக அம்மா வேடங்களில் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறார். அம்பிகா அப்போதும் சரி, இப்போது சரி சீரியல்களில் ஆக்டிவாக இருந்தார். அம்பிகா பற்றிய கிசுகிசுக்கள் மீண்டும் தமிழ் திரையுலக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. அம்பிகா மற்றும் நடிகர் வடிவேலு பற்றிய கிசுகிசுக்கள் பற்றி டாக்டர் காந்தராஜ் பேசினார். வாய்ப்புகள் குறைவாக இருந்த போது நடிகர் வடிவேலுவுடன் அம்பிகா நடித்தார்.
அம்பிகாவும் வடிவேலுவும் இரண்டு படங்களில் நடித்தனர். அன்று அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்ததாகவும் காந்தராஜ் கூறுகிறார். ஒரு காலத்தில் கவுண்டமணிக்கு இணையான முக்கியத்துவம் வடிவேலுக்கு இருந்தது. வடிவேலு வருவதற்குள் அம்பிகா தனது தொழிலில் இருந்து வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் அம்பிகாவின் முகத்தில் சுருக்கம் வந்தது. காதல் பரிசு படத்திற்கு வருவதற்குள் அம்பிகாவின் முகம் மாறியது. எனக்கு வயதாகி விட்டது. படத்தின் தோல்விக்கு கதாநாயகி சரியில்லாததே காரணம் என விமர்சனங்கள் சொல்லப்பட்டது. ஒரு திரைப்படத்தின் மூன்றாவது காட்சியில் அம்பிகாவின் பாத்திரம் இறந்து போனது. இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படம் சரியாக வரவில்லை. அதற்கு பிறகு வடிவேலு தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். இரண்டு படங்களில் ஒன்றாக நடித்தார்கள்.
அம்பிகாவைப் போலவே ராதாவைப் பற்றியும் தமிழ் ஊடகங்களில் கிசுகிசுக்கள் அதிகம். கார்த்திகா திருமணத்தின் போதும் இது நடந்தது. அன்றைய தினம் ராதாவைப் பற்றி திரைப்பட பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசினார்.
ராதா தனது மகளின் திருமணத்திற்கு திரையுலகின் பெரும்பாலானோரை அழைத்துள்ளார். வருவார்கள் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதிகம் பேர் வராததால் ராதாவுக்கு கவலை. சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் வந்தனர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் யாரும் வரவில்லை என்றும் செய்யாறு பாலு கூறினார்.
தற்போது மார்க்கெட் குறைந்துவிட்ட காரணத்தினால் அம்பிகா படங்களை தவர்த்துவிட்டார். அதற்கு பதிலாக சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் ஒன்று தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அருவி சீரியல். சரஸ்வதி என்ற பெயரில் அதில் தாய் பாத்திரத்தில் நடித்து வருகிறர் அம்பிகா.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்