'குறைந்தபட்ச புரிதல் இருக்கிறதா..?' ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'குறைந்தபட்ச புரிதல் இருக்கிறதா..?' ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்..

'குறைந்தபட்ச புரிதல் இருக்கிறதா..?' ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்..

Malavica Natarajan HT Tamil
Published May 10, 2025 06:29 AM IST

நாட்டில் நிலவும் போர் சூழல் குறித்து கருத்து தெரிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

'குறைந்தபட்ச புரிதல் இருக்கிறதா..?' ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்..
'குறைந்தபட்ச புரிதல் இருக்கிறதா..?' ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்..

மோதலை விட அமைதிக்கு முன்னுரிமை

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகைகளுல் ஒருவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான சூழ்நிலை மற்றும் போர் சூழல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டார்.

அந்தப் பதிவில், "போர் வேண்டாம் என்று சொல்லுங்கள். ஒரு ஜனநாயக நாட்டின் குடிமகள் என்ற முறையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு இதே வேண்டுகோளை நான் விடுக்கிறேன். மோதலை விட அமைதிக்கு முன்னுரிமை கொடுங்கள்.

உயிர்கள் போக கூடாது

பரஸ்பர புரிதலுக்கு வந்து தேவையற்ற உயிர்கள் காற்றில் பறந்து போகாமல் பார்த்துக் கொள்வோம். ராணுவ வீரர்கள், திறமையானவர்கள், அப்பாவி பொதுமக்கள் ஒருபோதும் இறக்கக் கூடாது. இந்த செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மற்றொரு போரைத் தடுக்க இராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.

நெட்டிசன்களின் ட்ரோலிங்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் தாக்குதல் நடத்தியதும், பதிலுக்கு, பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்தும் வருகிறது. இதற்கு நாட்டில் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதற்கு எதிராக போரை விரும்பாதவர்களின் கருத்துகள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

குறைந்தபட்ச புரிதல் இருக்கா?

அந்த வகையில், ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து இந்தியா தனது பிராந்தியத்தை பாதுகாக்கிறது. அது போருக்கு செல்வது என அர்த்தம் அல்ல" என்று அவர்கள் வாதிடுகிறார்கள். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலில் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன என்று கருத்து தெரிவித்து தவறு செய்கின்றனர். அவர்களுக்கு அங்குள்ள கள நிலைமை குறித்து குறைந்தபட்ச புரிதலாவது இருக்கிறதா என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner