Actress Abhirami: “எடை கூடி.. மன அழுத்தத்துல சிக்கி.. செத்துருவேனோன்னு பயந்தேன்” - அபிராமி வேதனை!
Actress Abhirami: அந்த நேரத்தில் உடல்ரீதியான பல்வேறு காரணங்களால், என்னுடைய எடை கூடி இருந்தது. அதை என்னால் அப்போது நன்றாகவே புரிந்து கொள்ள முடியாது. நான் அப்போது அதை இரண்டு விதமாக பிரித்தேன் - அபிராமி வேதனை!

Actress Abhirami: எடை கூடிய போது, எதிர்கொண்ட மனவேதனைகள் குறித்து நடிகை அபிராமி கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.
என்ன இப்படி குண்டாயிட்டேன்னு கேட்டு கஷ்டப்படுத்துவாங்க
அதில் அவர் பேசும் போது, “மீடியாவில் இருந்து மட்டுமல்ல, வெளியில் இருந்தும், எனக்கும் பாடி ஷேமிங் (உடல் ரீதியான கேலிகள்) நடந்திருக்கிறது. நான் ஆரம்பம் முதலே கொஞ்சம் உயரமாக இருப்பேன். அதனாலேயே, நான் பலவகையான பாடி ஷேமிங்கிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறேன். இடையே, எடை கூடி குண்டாகி இருந்தேன். அதை பார்க்கும் சிலர், என்ன இப்படி குண்டாகிவிட்டாய் என்று சர்வ சாதரணமாக கேட்பார்கள்.
ஆனால், அது எதனால் நடந்து இருக்கிறது. நாம் ஏதாவது மருத்துவ ரீதியான பிரச்சினைகளால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோமோ இல்லை, மனஅழுத்தத்தில் இருக்கிறோமோ என்பது பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு உதாரணம்தான்.. இதை தவிர்த்து என்ன கருத்துவிட்டாய்... முடியெல்லாம் கொட்டி விட்டதே.. முடியெல்லாம் வெள்ளையாகிவிட்டதே.. என்று கேட்டும் வார்த்தைகளால் சங்கடப்படுத்துவார்கள்.