Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து
Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து

Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றும்; பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும் என்றும் நடிகர் விஷால் கருத்துக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று தரிசனம்செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், ‘’ விஜய் ஆண்டனி பராசக்தி என்கிற டைட்டிலை, தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் பதிவுசெய்திட்டார். அதேமாதிரி சிவகாரத்திகேயன் நடித்த டீசர் தெலுங்கிலேயும் பராசக்தின்னு ரிலீஸ் செய்திட்டாங்க. எனக்குத்தெரிந்து இந்த விஷயம் நாசர் சாருக்குத் தெரியும்னு நினைக்கிறேன். இதை சமரசமாகப் பேசித்தீர்க்கணும்.
பூகம்பத்தை விட, விஷால் கை ஆட்டுனது தான், உலகம் முழுக்க என்னை எத்தனை பேர் நேசிக்கிறாங்கன்னு எத்தனை பேர் பிரார்த்தனை பண்றாங்கன்னு எனக்கு புரியவைச்சுச்சு. நம்ம சூப்பர் சூப்புராயன் மாஸ்டர் எனக்காக வேண்டிக்கிட்டார். அவரைப் போய் பார்க்கப் போறேன். ரொம்ப நன்றி. 4 நிமிஷத்தில் உலத்துக்கே காட்டிடீங்க என்னை எத்தனை பேர் நேசிக்குறாங்கன்னு. அதனால் எந்த பேட்டியாக இருந்தாலும் என் கைகளை ஆட்டிட்டுத் தான் பேசுவேன்.