‘முதல் ஷோ கேன்சல் ஆனாலே அவ்வளவு தான்னு சொல்லிடுவாங்க.. வீர தீர சூரன் பெரிய வெற்றி’: நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘முதல் ஷோ கேன்சல் ஆனாலே அவ்வளவு தான்னு சொல்லிடுவாங்க.. வீர தீர சூரன் பெரிய வெற்றி’: நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு

‘முதல் ஷோ கேன்சல் ஆனாலே அவ்வளவு தான்னு சொல்லிடுவாங்க.. வீர தீர சூரன் பெரிய வெற்றி’: நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு

Marimuthu M HT Tamil Published Apr 04, 2025 02:13 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 04, 2025 02:13 PM IST

வீர தீர சூரன் பட வெற்றி குறித்து நடிகர் விக்ரம் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

‘முதல் ஷோ கேன்சல் ஆனாலே அவ்வளவு தான்னு சொல்லிடுவாங்க.. வீர தீர சூரன் பெரிய வெற்றி’: நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு
‘முதல் ஷோ கேன்சல் ஆனாலே அவ்வளவு தான்னு சொல்லிடுவாங்க.. வீர தீர சூரன் பெரிய வெற்றி’: நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு

வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், தயாரிப்புத்தரப்பினரின் சில பிரச்னைகளால், முதல் இரண்டு ஷோக்கள், கேன்சல் ஆனது. மாலையில் தான் படம் ரிலீஸானது. இந்நிலையில் படம் வெற்றியான நிலையைச் சென்று அடைந்துள்ளதாக, நடிகர் விக்ரம் தெரிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக ஒரு வீடியோவை தன் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கும் நடிகர் விக்ரம், ’’ ஒரே ஒரு வாழ்க்கை ஈஸியா வாழ்ந்திருன்னு சொல்லிட்டுப் போயிட்டான். ஆனால், இந்த வாழ்க்கை இருக்கே அப்பா.. ஏதாவது பிரச்னை. ஏதாவது ஒன்று, பந்தை தூக்கி வீசிடுது நம் வாழ்க்கையில். அந்த மாதிரி நிறைய சந்திக்க வேண்டியிருக்கு இல்ல. உதாரணத்திற்கு வீர தீர சூரன் ரிலீஸுக்கு முன்பே அதைப் பார்த்து, அது ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஆகப்போகுதுன்னு, என்ன ஒரு படம் புதுசா இருக்கப்போகுதுன்னு சொன்னாங்க. அடுத்து ராவாக இருக்கு, மாஸாக இருக்குன்னு இந்த வருஷத்தோட பெரிய பிளாக் பஸ்டர்னு சொல்லி, எங்க எல்லோரையும் உற்சாகப்படுத்திட்டுப் போயிட்டாங்க.

’வீர தீர சூரனுக்கு லீகல் பிரச்னைகள்’: நடிகர் விக்ரம்

ஆனால், பார்த்தால் எல்லோருக்கும் தெரிந்த விஷயம், லீகல் பிரச்னைகள். அடுத்து இந்தப் பிரச்னையைத் தீர்க்கலைன்னா, ஒரு நான்கு வாரம் வீர தீர சூரனை ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு கட்டாயம். அந்த மாதிரி எல்லாம் ஆகிடுச்சு.

எனக்கு என்னவென்றால், இந்தப் படம் ஃபேன்ஸ்களிடம் போய்ச்சேரணும். இந்தப் படத்துக்காக நாங்கள் அவ்வளவு முயற்சி போட்டோம். நான், புரொடியூசர், இந்தப் படத்தில் நடிச்சவங்க எல்லோருமே பெரிய உழைப்பினை போட்டோம்.

ரொம்ப நாளாக எனது ரசிகர்களுக்காக ராவாக கிராமத்து பாணியில் ஒரு படம் பண்ணனும்னு இருந்துச்சு. ஆனால், மாஸாக இருக்கணும். ரொம்ப ரியலாக இருக்கணும். புதுசாக ஏதாவது டிரை பண்ணலாமேன்னு டிரை பண்ணிட்டுத்தான் இருப்போம். ஆனால், அது வராதபட்சத்தில் ரொம்பக் கஷ்டமாக இருந்துச்சு. அப்புறம் ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு.

சினிமாவுக்காக எது வேண்டுமென்றாலும் பண்ண நான் தயாராக இருப்பது எல்லோருக்கும் தெரியும். இதெல்லாம் ஒரு மேட்டரான்னு என்னால் என்ன பண்ண முடிஞ்சதோ, அதை செய்து, படம் வெளியே வந்துச்சு.

’ஒரு படத்துடைய முதல் ஷோ கேன்சல் என்றாலே அந்தப் படம் எந்திரிக்காது’: நடிகர் விக்ரம்

ஒரு படத்துடைய முதல் ஷோ கேன்சல் அப்படி என்றாலே அந்தப் படம் எந்திரிக்காது.

ஆனால், எங்கள் படத்துக்கு இரண்டு ஷோ கேன்சல் ஆகி, சாயந்திரம் தான் வீர தீர சூரன் ரிலீஸ் ஆனது. அதனால், முதல் நாள் வருமானம் என்பது கண்டிப்பாக பாதிக்கப்பட்டுச்சு.

ஆனால், வீர தீர சூரன் தியேட்டருக்கு வந்து, பார்த்த ஒவ்வொருத்தரும் முன்னாடி என்ன சொன்னாங்களோ, அதை விட அழகாக நிறைய பாராட்டுனாங்க. குறிப்பாக, பேமிலியைச் சேர்ந்தவங்க படம் சூப்பராக இருக்கு, மாஸாக இருக்குன்னு பாராட்டுனாங்க. மேலும் ரொம்ப என்சாய் பண்ணுனோம்னு சொன்னாங்க. சீட் நுனியில் உட்கார்ந்து பார்த்தோம்ன்னு சொன்னாங்க. இதையெல்லாம் கேட்கும்போது, அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு. இப்போது வீர தீர சூரன் பெரிய வெற்றியை நோக்கித்தான் போகுதுன்னு ரொம்ப உறுதியாக சொல்லமுடியுது. 

அதை நினைச்சுப் பார்க்கும்போது நன்றி மட்டும் தான் சொல்லத்தோணுது. இந்தப் படம் நல்லபடியாக போறதுக்கு ரசிகர்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும். இந்தப் படம் வந்து உங்களுக்காகப் பண்ணுன படம். நாங்க நினைச்சது நடந்துச்சு. இது சேர வேண்டியவங்களுக்கு சேர்ந்துட்டு இருக்குதுன்னு நினைக்கும்போது சந்தோஷமாக இருக்குது.

வீர தீர சூரன் பார்த்தவங்க எல்லாம் என்சாய் பண்ணியிருப்பீங்க. பார்க்காதவங்க எல்லோரும் பார்ப்பீங்கன்னு நம்புறேன். நன்றி’’ என நடிகர் விக்ரம் தெரிவித்து இருக்கிறார்.