Actor Vijay: ‘இனி ஏறி அடிக்கப் போறேன்’ விஜய் எடுத்த அதிரடி முடிவு!
Thalapathy Vijay: ‘இனி சிங்கப்பாதை தான் என்கிற முடிவிற்கு விஜய் வந்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்’

திரையுலகினர் நடத்திய கலைஞர் நூற்றாண்டு விழா பற்றி பல்வேற விமர்சனங்களை, பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதெல்லாம் அரசியல் சார்ந்தும், விமர்சனம் சார்ந்தும் இருக்கிறது. அது இருக்கட்டும், கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்காதது தான்,இப்போதைக்கு ஹாட் டாக்.
அஜித் பங்கேற்காதது, புதுமையல்ல. ஆனால், விஜய் அப்படியல்ல. கடந்த காலங்களில் அவருக்கு ஏற்பில்லாத பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றியிருக்கிறார். அது அவருடைய பெருந்தன்மையாகவும் பார்க்கப்பட்டது. இந்த முறை கலைஞர் 100 நிகழ்ச்சியை விஜய் புறக்கணித்தது, சர்ச்சை ஏற்படுத்தியது என்று கூறுவதை விட, சரியான முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை தீவிரமாக அரசியலுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கும் விஜய், இனி எந்த அரசியல் கட்சிகளில் விழாக்களிலும் பங்கேற்கப் போவதில்லை என்கிற முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் திமுக அரசின் மீதான சில விமர்சனங்களை கூர்ந்து கவனிக்கும் விஜய், இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், தன் இயக்கத்தின் செயல்பாட்டை அது பாதிக்கும் என்று அவர் விரும்புகிறார்.
