பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு.. விஜய் சேதுபதி மீது பாய்ந்த புகார்! - நடந்தது என்ன?
நடிகர் விஜய் சேதுபதி மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி, அதில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் தீபக் பேசியதாக காரைக்குடி காவல் ஆணையாளரிடம் அதன் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர்.
விஜய் சேதுபதி மீது புகார்
இந்த புகாரில் நடிகர் தீபக், அதனை ஒளிபரப்பிய விஜய் டிவி மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. போதா குறைக்கு நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
யார் யாருக்கு வீட்டில் இடம்?
முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் தர்ஷிகாவும், சத்யாவும் வெளியேற்றப்பட்டனர். தற்போது வீட்டிற்குள் பவித்ரா ஜனனி, ராயன், ஜாக்குலின், ரானவ், ரஞ்சித், முத்துக்குமரன், , மஞ்சரி நாராயணன், , சௌந்தரியா நஞ்சுதன், ஜெஃப்ரி ஆகியோர் உள்ளனர்.
டாபிக்ஸ்