Actor Vidharth: ‘13 வருசமாச்சு.. 2 நாளா சிகிச்சையில் இருந்தேன்..’ நடிகர் விதார்த் உருக்கம்!
‘இப்படியான ஒரு ஆவல் தான், எனக்கு 13 ஆண்டுகளாக இருந்தது. இன்று தான் அது நடந்திருக்கிறது’

இறுகப்பற்று திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்த படக்குழுவினர் சார்பில், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நடிகர் விதார்த், உணர்வுபூர்வமாக பேசினார். இதோ அவருடைய பேச்சு:
‘‘13 வருடமாகிவிட்டது எனக்கு, மைனா ரிலீஸ் ஆன பின், படம் வெற்றியான பின், பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம். அணியாக அந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்டது சந்தோசமாக இருந்தது. அதுக்கு அப்புறம் குரங்கு பொம்மை படம் ரிலீஸ் ஆகி போகும் போது, அதை ப்ரமோட் பண்ண மீட் பண்ணோம். அந்த படத்தின் தயாரிப்பாளரே உட்காரந்து, ‘எங்கள் படம் வெற்றி அடைந்து விட்டது, சந்தோசமாக இருக்கிறது’ என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்திட்டு இருந்தேன்.
ஒவ்வொரு படம் பண்ணும் போதும், அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது நடக்கவே இல்லை. அது தான் உண்மை. நல்ல படமாக தான் இருந்ததே தவிர, கொஞ்சம் பேர் பார்ப்பாங்க, நல்லா இருக்கு என்று சொல்வார்களே தவிர, அது பெருவாரியான மக்களிடம் போய் சேரவில்லை.