போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி யார்? ஆப்பிரிக்க இளைஞர் சிக்கியது எப்படி?
அவர்களிடம் நடத்தபட்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 1 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது.. சப்ளை செய்த அதிமுக நிர்வாகி யார்? ஆப்பிரிக்க இளைஞர் சிக்கியது எப்படி?
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
அதிமுக நிர்வாகி வழியாக நடந்த சப்ளை
முன்னதாக, பார் மோதலில் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி பிரசாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது தொலைப்பேசியில் இருந்த தகவல்களின் அடிப்படையில் அவர் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அதற்கு உதவியாக இருந்த பிரதீப் என்பவரும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 1 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.