Actor Sri: ‘அவ்வளவு பிரச்சினைகள்.. அப்போதே சினிமாவை விட்டு போயிடலாம்னு நினைச்சேன்’ - நடிகர் ஸ்ரீ த்ரோபேக் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Sri: ‘அவ்வளவு பிரச்சினைகள்.. அப்போதே சினிமாவை விட்டு போயிடலாம்னு நினைச்சேன்’ - நடிகர் ஸ்ரீ த்ரோபேக் பேட்டி

Actor Sri: ‘அவ்வளவு பிரச்சினைகள்.. அப்போதே சினிமாவை விட்டு போயிடலாம்னு நினைச்சேன்’ - நடிகர் ஸ்ரீ த்ரோபேக் பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 13, 2025 02:48 PM IST

Actor Sri: மற்றவர்கள் போல நான் நடித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்ய வில்லை. தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, ரேடியோ உள்ளிட்டவற்றில் வேலை பார்த்தேன். இந்த நிலையில்தான் கனா காணும் காலங்கள் சீரியலுக்கான ஆடிஷன் செல்வதாக நண்பர் ஒருவர் சொன்னார். - - பேட்டி!

Actor Sri: ‘அவ்வளவு பிரச்சினைகள்.. அப்போதே சினிமாவை விட்டு போயிடலாம்னு நினைச்சேன்’ -  நடிகர் ஸ்ரீ த்ரோபேக் பேட்டி
Actor Sri: ‘அவ்வளவு பிரச்சினைகள்.. அப்போதே சினிமாவை விட்டு போயிடலாம்னு நினைச்சேன்’ - நடிகர் ஸ்ரீ த்ரோபேக் பேட்டி

அதில் அவர் பேசும் போது, ‘என்னுடைய வீட்டில் யாரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் கிடையாது. ஆனால் எனக்கு அடிப்படையிலேயே சினிமா மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தது. நான் விஸ் காம் படித்தேன். அங்கு முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்திற்கான ஆடிஷன் செல்வதாக சொன்னார்கள். அதில் சும்மா கலந்து கொண்டேன். ஆனால், அதன் பின்னர் எனக்கு அங்கிருந்து போன்கால் வரவே இல்லை.. நானும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

நடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

காரணம், மற்றவர்கள் போல நான் நடித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்ய வில்லை. பின்னர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, ரேடியோ உள்ளிட்டவற்றில் வேலை பார்த்தேன். இந்த நிலையில்தான் கனா காணும் காலங்கள் சீரியலுக்கான ஆடிஷன் செல்வதாக நண்பர் ஒருவர் சொன்னார். இதனையடுத்து அங்கு சென்றேன்.

நல்வாய்ப்பாக, கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்துதான் இயக்குநர் பாலாஜி சக்திவேல் எடுத்த வழக்கு எண் படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதன் பின்னர் அப்படியே அடுத்தடுத்தப்படங்களில் நடிக்க வாய்ப்புக்கிடைத்தது.

அடிப்படையில் கூச்ச சுபாவம் கொண்டவன்

நான் அடிப்படையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவன் ஒரு வேளை எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்றால், என்ன செய்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் அதிக இடைவேளை இருந்தது. அந்த இடைவேளையில் நான் நிறைய கதைகளைக் கேட்டேன். அதில், நான் தவறவிட்ட சில கதைகள் மிகப்பெரிய ஹிட்டாகின. அப்போது நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். தொடர்ந்து சினிமாவை விட்டுவிலகி விடலாம் என்று நினைத்தேன். வேறு வேலை பார்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தேன்.அப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பட வாய்ப்புக் கிடைத்தது. சினிமா பயணம் தொடர்ந்தது’ என்று பேசினார்.

நடிகர் ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது, மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப்பற்று என சில படங்களில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சில படங்களில் நடித்தாலும், அதில் அனைத்திலும் அவரது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ஒவ்வொரு படங்களில் ஒவ்வொரு விதமான நடிப்பை காட்டியிருப்பார். வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது படத்தில் அப்பாவி இளைஞனாக காதல் வயப்படும் போதும், தன் காதலிக்காக செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளும் போதும் என ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிரூபித்து இருப்பார்.

மாநகரத்தில் கோவாக்கார இளைஞனாக, வில் அம்பு படத்தில் சுற்றித் திரிந்து கெத்து காட்டும் பையனாக என அசத்தியிருப்பார். இவர் இனி பல படங்களில் ஜொலிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இறுகப்பற்று படத்திற்கு பின் இவர் எந்த படத்திலும் நடிக்க வில்லை. மேலும் பிக்பாஸ் முதலாவது சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே சென்று என்னால் இங்கு இருக்க முடியவில்லை எனக் கூறி அவராகவே வெளியேறினார்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.