வேறு வழியே இல்லாமல் நடித்து சொதப்பிய சூர்யா.. கிடுக்குப்பிடி கேள்வியால் சிக்க வைத்த இயக்குநர்..
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா சினிமாவிற்கு நடிக்க வந்த கதையை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சூர்யாவின் தந்தை சிவக்குமார் நடிகர் சித்ரா லக்ஷுமணனின் டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டி தான் இப்போது வைரலாகிறது.
கங்குவாவில் சம்பவம் செய்த சிவக்குமார்
முன்னதாக கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா குறித்து அவரது தந்தை சிவக்குமார் பேசியது வைரலானது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் சூர்யாவிற்கு சேர்ந்தது போல் 4 வார்த்தை பேசத் தெரியாது, கஷ்டப்பட்டு படித்தான், கூட்டி பெருக்கும் வேலை செய்து கொண்டிருந்தான் என பலத் தகவல்களை கூறினார். இவரது இந்தப் பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்த நிலையில், சூர்யா சினிமாவிற்குள் எப்படி அடி எடுத்து வைத்தார் எனக் கூறியுள்ளார் நடிகர் சிவக்குமார்.
சினிமாவில் ரிஸ்க் அதிகம்
சினிமாத் துறைக்கு என் பிள்ளைகள் வர வேண்டும் என நான் நினைக்க வில்லை. இதிலிருக்கும் ரிஸ்க் என்னவென்று நமக்கு தெரியும். இதனால், என் பிள்ளைகள் படித்து வேலைக்கு சென்று சொந்த காலில் நிற்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன் என சிவக்குமார் கூறியுள்ளார்.