Kalaipuli G Sekaran: நடிகர், தயாரிப்பாளர்,இயக்குநர்; சிறுபட்ஜெட் படங்களுக்கு குரல் கொடுத்த கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
Kalaipuli G Sekaran: சினிமா விநியோகஸ்தராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி ஜி சேகரன் ஆரம்ப காலத்தில் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராக மாறினார். அதன் மூலமாக தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

Kalaipuli G Sekaran: விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் கலைப்புலி ஜி சேகரன். இவர் இன்று (ஏப்ரல் 13) உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 73.
சினிமா விநியோகஸ்தராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி ஜி சேகரன் ஆரம்ப காலத்தில் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராக மாறினார். அதன் மூலமாக தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.
தொடர்ந்து, கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 1985ம் ஆண்டு வெளியான ‘யார்’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது. தொடர்ந்து ஜமீன் கோட்டை, குடும்பச் சங்கிலி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், ஊரைத் தெரிசுக்கிட்டேன், காவல் பூனைகள், உளவாளி கட்டுவிரியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.
விநியோக சங்கத்தலைவராகவும் இருந்த ஜி சேகரன் சிறுபட்ஜெட் படங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஆவார். இவரது இறப்பு திரை உலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.

டாபிக்ஸ்