'வீட்டை இடிச்சு.. தெருத்தெருவா சுத்த விட்டு.. ரஜினி சார்கிட்ட மாட்டிவிட்டு..' ஆர்யாவால் சந்தானம் பட்ட கஷ்டங்கள்..
தன் உயிர் நண்பனான ஆர்யாவால் தான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என ஒரு பட்டியலையே போட்டுள்ளார் நடிகர் சந்தானம்.

நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன் நண்பர்கள் பற்றி பேசியுள்ளார். அதில் ஆர்வை பற்றி பேசும் போது, "நண்பர்கள்லயே உயிர் நண்பன்னு சொல்லுவாங்க இல்ல. அந்த மாதிரி தான் நானும் ஆர்யாவும். கல்லூரியின் கதை படத்தில் தான் நானும் ஆர்யாவும் நண்பர்களாக மாறினோம். இதுதான் நாங்க ரெண்டு பேரும் நடிச்ச முதல் படம். அதுலயே ரெண்டு பேரும் க்ளோஸ் ஆகிட்டோம்.
ரிச் கேர்ள்ஸ் முன்னாடி சீன்
அந்த சமயத்துல ஹீரோயின் பிரண்ட்ஸா நடிக்க பெங்களூர்ல இருந்து ரிச் கேர்ள்ஸ கூட்டிட்டு வருவாங்க. அப்போ எனக்கு மன்மதன் படம் இல்லாம 2 படம் தான் ரிலீஸ் ஆகிருக்கு. என்ன பெருசா வெளிய தெரியாது. அதுவும் இல்லாம அவங்க பெங்களூர்ல இருந்கு வந்திருக்காங்க. இந்தப் படத்துக்கு ஆர்யா தான் ஹீரோ. அப்போ ஆர்யா அறிந்தும் அறியாமலும் படத்துல நடிச்சிருக்கான். ஆனா ரிலீஸ் ஆகல.
காமெடி சூப்பர் ஸ்டார்
நாங்க எல்லாம் ஒன்னா தான் உக்காந்து சாப்பிடுவோம். எங்களுக்கு எல்லாம் கேரவன் கிடையாது. அந்த சமயத்துல ஹீரோயின் பிரண்ட்ஸ் எல்லாம் நீங்க யார் என என்ன பாத்து கேக்குறாங்க. அப்போ ஆர்யா, இவர பாத்தா யாருன்னு கேக்குறீங்க. இவரு காமெடி சூப்பர் ஸ்டார். அதுவும் சவுத் இந்தியன் காமெடி சூப்பர் ஸ்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாத்துலயும் இவரு தான் சூப்பர் ஸ்டார்ன்னு சொல்றான்.
நான் காமெடியனே இல்ல
அந்த பொன்னுங்க அப்படியே பாக்குறாங்க. உடனே, அவன் என்ன நடிச்சு காட்ட சொல்றான். நானும் அவங்களுக்காக நடிக்குறேன். அவங்க சிரிக்கவே இல்ல. உடனே ஆர்யாவும் என்கூட சேர்ந்து நடிக்குறான். அவங்க அப்பவும் சிரிக்கவே இல்ல. இதை எல்லாம் டைரக்டரும் புரொடியூசரும் பாத்துட்டாங்க.
நான் இத பெருசா எடுத்துக்கல. நான் காமெடியனே இல்லன்னாலும் பரவாயில்ல விடுன்னு சொல்றேன். ஆனா, ஆர்யா இத சீரியஸா தான் எடுத்துக்கிட்டான். அதுனால சேட்டை படத்துல டைட்டில் கார்டுல என் பேர் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம்ன்னு வருது. எனக்கே தெரியாம அவன் இந்த வேலைய பாத்திருக்கான்.
ரஜினி சார்கிட்ட மாட்டிக்கிட்டேன்
நான் அடுத்ததா, ரஜினி சாரோட லிங்கா படத்துல நடிச்ச சமயத்துல அவர் கூப்பிட்டு என்ன கேக்குறாரு. நீங்க தான் காமெடி சூப்பர் ஸ்டாரான்னு. எனக்கு தெரியாது. ஆரியா தான் அப்படி போட்டான்னு சொன்னேன். ஆனா அவரு நீங்க சொல்லாமலா அப்படி போட்டாருன்னு கேட்டாரு. இப்படி எல்லாம் அவன் என்ன சிக்கல்ல மாட்டி விட்டுடுவான்.
வீடு வாங்குனேன்
அதோட எல்லாம் அவன் நிறுத்தல. இப்போ ஒரு மேட்டர் நடந்தது. இந்த படம் ஓகே சொல்லிட்டேன். ஆர்யாகிட்ட போய் கத சொல்றோம். ஆர்யாவும் இத பண்றேன்னு சொல்லிட்டான். சொல்லி முடிச்சு 6 மாசம் ஆச்சு. இந்த கேப்ல நான் ஒரு இடம் வாங்குனேன். ஒரு பழைய வீட்டோடயே வாங்குனேன். அந்த வீட்ட ஆல்டர் மட்டும் பண்ணிட்டு அந்த வீட்டுக்கு போயிடலாம்ன்னு தான் இருந்தேன். எங்க அம்மாவும் மனைவியும் வெள்ளிக்கிழமை ஆன அந்த வீட்டுக்கு போய்ட்டு விளக்கு ஏத்துவாங்க. அந்த வீடு எங்களுக்கு செட் ஆகிடுச்சு.
வீட்ட தரைமட்டமாக்கிட்டான்
அந்த சமயத்துல ஆர்யா படத்தோட கதை எல்லாம் கேட்டுட்டு எனக்கு போன் பண்றான். அப்போ தான் இந்த வீடு விஷயத்த சொல்றேன். அத கேட்டுட்டு அங்க வந்தான். அப்போ படத்த பத்தி எல்லாம் பேசிட்டு வீட்ட பாத்தான். உடனே இது என்னடா வீடு நல்லாவே இல்லன்னு சொல்லிட்டான்.
வீட்டுக்கு உள்ள எல்லாம் போயிட்டு பாத்துட்டு வீட்ட இடிச்சிடுன்னு சொல்லிட்டான். நான் வீட்ல எல்லாம் இங்க தான் வர்போறோம்ன்னு சொல்லிட்டேன். அதுவும் இல்லாம வீட்ட இடிச்சு கட்டினா பயங்கரமா செலவாகும்ன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கேன். நீ இப்ப இப்படி தான் சொல்லுவ அதுக்கு அப்புறம் இது சரியில்ல. அது சரியில்லன்னு சொல்லுவன்னு சொல்லிட்டு இருப்பன்னு சொல்லி, அவனே போன் எடுத்தான். ஒரு பாய்க்கு போன் பண்ணினான், வீட்ட இடிக்க சொன்னான். 4 நாள்ல அந்த வீடு இல்ல, இடிச்சு தரமட்டமாக்கி வழிச்சு எடுத்துட்டு போயிட்டாங்க.
மேலும் படிக்க| இங்கு நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன.. 3 வாரங்களுக்கு பின் பேசிய குஷ்பு.. என்ன நடந்தது?
தெருத்தெருவா அலையுறாங்க
வழக்கம் போல எங்க அம்மாவும். மனைவியும் விளக்கு ஏத்த அங்க வர்றாங்க. இதபத்தி எல்லாம் சொன்னா வருத்தபடுவாங்கன்னு நானும் சொல்லல. அப்போ தெருமாறி வந்திட்டமோன்னு எல்லாம் அவங்க ரொம்ப நேரம் தேடிட்டு எனக்கு போன் பண்றாங்க. அப்போ தான் நடந்தது எல்லாத்தையும் சொன்னேன்" என ஆர்யாவுடனான தன் நினைவுகளை பொது வெளியில் கூறினார்.
