Actor Samuthirakani: 'மிஷ்கின் பேச்ச தப்பாவே நினைக்கல.. நீங்க எல்லாம் சிரிச்சீங்க தான..' கோவமான சமுத்திரகனி
Actor Samuthirakani: இளையராஜா குறித்த மிஷ்கினின் கருத்து தனக்கு தவறாக படவில்லை என்றும், பத்திரிகையாளர்களும் அவரது பேச்சை கேட்டு சிரித்ததாகவும் நடிகர் சமுத்திரகனி கூறியுள்ளார்.

Actor Samuthirakani: திரு. மாணிக்கம் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டார். அப்போது, பத்திரிகையாளர்கள், படத்தின் பெயருக்கு முன் திரு போடுகிறோம். ஆனால், எல்லாரும் போற்றும் இளையராஜாவை மிஷ்கின் மரியாதை குறைவாக பேசுகிறாரே என கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்வியால் கோவமான சமுத்திரகனி, இந்த விஷயம் தான் முடிந்துவிட்டதே. அவர் தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டாரே அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை. இது உங்களுக்கு போதவில்லையா எனக் கேட்டார்.
இது அவனோட இயல்பு
இருந்தும் விடாமல் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய வண்ணமே இருந்தனர். அப்போது, மிஷ்கின் பேசியதற்கு அவரே விளக்கம் கொடுத்துவிட்டார். இது அன்பின் வெளிப்பாடு. இது தன் உணர்வுகளின் உச்சமாக அவர் பேசிவிட்டார். என்னைக் கூட கெட்டவார்த்தை எல்லாம் சொல்லி முதுகில் அடிச்சு தான் பேசுவான். அது அவனோட இயல்பு.
எங்களுக்கு தான் தெரியும்
இது அன்பின் உச்சத்தின் வெளிப்பாடு. நான் இதை அப்படி தான் பாக்கிறேன். இதை நான் எந்த இடத்திலும் தவறாக பார்க்கவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், வெற்றிமாறன், அமீர், மிஷ்கின், நான் எல்லாம் என்ன பேசினேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.
நம்ம ஊர்ல கெட்ட வார்த்தை தான் அன்பின் சொல். அவனோட அன்பு இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்குறதால இப்படி பேசிட்டான்னு நெனச்சிக்கோங்க. இந்த வார்த்தை எல்லாம் யாருக்குமே தெரியாதா. இல்ல பயன்படுத்தாம தான் இருக்கோமா?
நான் கால்ல விழுறேன்
நீங்க தப்புன்னு சொன்னீங்க. அவன் மன்னிப்பு கேட்டுட்டான். அவனைத் தெரிந்தவர்களுக்கு தெரியும். அவன் யாரென்று. அவனைத் தெரியாதவர்களுக்கு தான் இந்த மன்னிப்பே. எங்க அண்ணனுக்காக நானும் உங்க காலத் தொட்டு கூட மன்னிப்பு கேட்டுக்குறேன்.
சிரிக்கத்தானே செஞ்சீங்க
அவர் பேசும்போதும் நீங்க எல்லாம் அங்க தான இருந்தீங்க. நீங்க கைதட்டி சிரிச்சிட்டு தான இருந்தீங்க. அவர பேச விட்டுட்டு இ்பபோ என்ன கேள்வி கேக்குறீங்க" என சமுத்திரகனி பத்திரிகையாளர்களிடம் தன் கேள்வியை முன் வைத்தார்.
இளையராஜா விமர்சனம்
முன்னதாக, பாட்டல் ராதா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், குடியை ஆதரிப்பது போன்றும், இளையராஜாவை ஒருமையிலும் பேசி இருந்தார். அந்த வார்த்தைகள் தான் தமிழ் திரையுலகில் பிரச்சனையை கிளப்பி உள்ளது. மிஷ்கின் பேசும் போது யாரும் குறுக்கே சென்று தடுத்து நிறுத்தாமல் சிரித்து வந்தனர் என்ற குற்றச்சாட்டும் நாளுக்கு நாள் அதிகரித்தது.
அத்துடன், மிஷ்கினின் பேச்சுக்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன், அதுகுறித்த விளக்கமும் அளித்தார். இருந்தும், பத்திரிகையாளர்கள் மிஷ்கினின் பேச்சு குறித்து பட விழாக்களில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சமுத்ரகனி பத்திரிகையாளர்களையும் குற்றம்சாட்டினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்