கண்ணுங்களா.. செல்லங்களா.. போயிட்டு வரட்டா! பிக்பாஸில் இருந்து வெளியேறும் ரஞ்சித்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கண்ணுங்களா.. செல்லங்களா.. போயிட்டு வரட்டா! பிக்பாஸில் இருந்து வெளியேறும் ரஞ்சித்!

கண்ணுங்களா.. செல்லங்களா.. போயிட்டு வரட்டா! பிக்பாஸில் இருந்து வெளியேறும் ரஞ்சித்!

Malavica Natarajan HT Tamil
Dec 21, 2024 03:06 PM IST

பிக்பாஸ் வீட்டில் கோவத்தை காட்டாமல் அன்பால் அனைவரையும் நட்பாக்கி வந்த ரஞ்சித் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கண்ணுங்களா.. செல்லங்களா.. போயிட்டு வரட்டா! பிக்பாஸில் இருந்து வெளியேறும் ரஞ்சித்!
கண்ணுங்களா.. செல்லங்களா.. போயிட்டு வரட்டா! பிக்பாஸில் இருந்து வெளியேறும் ரஞ்சித்!

கேப்டன்சி டாஸ்க் ரத்து

மேலும், இந்த வாரத்தில் நடந்த கேப்டன்சி டாஸ்கில் பிக்பாஸ் அறிவுறுத்தலையும் மீறி போட்டியாளர்கள் விட்டுக் கொடுத்து விளையாடியதால், இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் ரத்து செய்யப்பட்டதுடன் இனி ஃபிரி நாமினேஷன் பாஸ் வழங்கப்பட மாட்டாது என்றும் பிக்பாஸ் திட்டவட்டமாக அறிவித்தது. இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சோகத்தில் உள்ளனர்.

டிஆர்பி ரேட்டிங்கில் சரிவு

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்

முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் தர்ஷிகாவும், சத்யாவும் வெளியேற்றப்பட்டனர்.

மீதமுள்ள நாட்களை தாக்குப் பிடிப்பது யார்?

75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் நான்கு வாரங்களில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதிக வாக்குகள்

இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கும் போட்டியாளர்களில் முத்துக்குமாரனுக்கு அதிக வாக்குகளும் ராயன், ரஞ்சித் மற்றும் அன்ஷிதாவிற்கு குறைந்த வாக்குகளும் கிடைத்து இருக்கிறது. இதில் நடிகர் ரஞ்சித்தை ஃபேமிலி சுற்று வரை தக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில், இந்த வாரம் அவர் தான் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார் எனத் தெரிகிறது. இதனால், அவர் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

72வது நாளில் ராணவ்விற்கு வந்த வினை

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் 72வது நாளில் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை விளையாடி வந்தனர். அப்போது, ஜெஃப்ரி ராணவ்வை கீழே தள்ளி அழுத்தியுள்ளார். இதில், ராணவ்விற்கு தோள்பட்டையில் அடிபட்டு வலியால் துடித்துள்ளார்.

இருப்பினும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களான அன்ஷிதா, சௌந்தர்யா, ஜெஃப்ரி போன்றோர் விளையாட்டில் ராணவ் தனியாக தெரியவேண்டும் என்பதற்காக நடித்து வருகிறார் என கூறிவந்தனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.