Rajnikanth: கண் விழித்த ரஜினிகாந்த்.. கூறிய வார்த்தை என்ன தெரியுமா? விரைவில் மாற்றம்
Rajnikanth: உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது கண் விழித்து, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்றைய தினம் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நலம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்திற்கு அடி வயிற்றுப் பகுதியில் ஸ்டெண்ட் மற்றும், எலெக்டிவ் ப்ரோசீஜர் எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது மயக்கம் தெளிந்து கண் முழித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு உடல்நலக் குறைவு
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், கவலையடைந்து, அவர் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது தொடர்பான கேள்விகளை, சமூகவலைதளங்களில் எழுப்பி எழுப்பினர். இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தி சார்பில் வீடியோ ஒன்று வெளியானது.
