Rajini About RMV: ‘அண்ணா வழியில் வாழ்ந்தவர் ஆர்.எம்.வீ!’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!
”அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள், மத்திய, மாநில அமைச்சர்களாகி, கல்வி நிறுவன அதிபர்களாகி பேரும், புகழும், பணத்தோடு இப்போதும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்”

மறைந்த முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள ஆர்.எம்.வீ இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஒரு முழு வாழ்கையை வாழ்ந்து நம்மை விட்டு ஆர்.எம்.வீ சார் பிரிந்து உள்ளார். அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்கை அரசியல், சினிமா வாழ்கைகளில் வலது கையாக ஆர்.எம்.வீ சார் இருந்தார். அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள், மத்திய, மாநில அமைச்சர்களாகி, கல்வி நிறுவன அதிபர்களாகி பேரும், புகழும், பணத்தோடு இப்போதும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆர்.எம்.வீ அவர்கள் எப்போதும் பணத்தின் பின்னால் போனது இல்லை, அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர் ஆர்.எம்.வீ அவர்கள், எனக்கும், ஆர்.எம்.வீ சார் உடனான நட்பு புனிதமானது, உணர்ச்சிகரமானது, ஆழமானது. என் வாழ்நாளில் நான் அவரை மறக்க முடியாது, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் தொடர்புடையவர்களுக்கும் நன்றி ” என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளர்.
யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?
ஆர்.எம்.வீ என அறியப்படும் ஆர்.எம்.வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் பிறந்தவர். இளம் வயது முதலே திராவிட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த வீரப்பன், காரைக்குடி ராமசுப்பையா மூலமாக பெரியாருக்கு அறிமுகம் ஆனார். பின்னர் பெரியார் உடன் ஈரோடு சென்று பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு திராவிட இயக்கத் தலைவர்கள் உடன் தொடர்பு ஏற்பட்டது.