‘சிலை வச்சதே பெரிய விஷயம் அதுக்குள்ள மணிமண்டபமா?’ - சிவாஜி சிலை திறப்பில் பிரபு எமோஷனல் பேச்சு!
திருச்சி வாழ் மக்களுக்கு எங்களுடைய குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் அப்பாவுடன் நாங்கள் மாட்டு வண்டியில் திருச்சியை சுற்றி பல இடங்களுக்கு வலம் வந்திருக்கிறோம். - பிரபு எமோஷனல் பேச்சு!

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு பேசியதாவது, ‘இளம் வயதில் வாழ்ந்தது எல்லாமே திருச்சியில் தான். இங்கே அவருக்கான சிலை வைப்பது என்பது அவருடைய ஆத்மாவை சாந்தப்படுத்தும். இதற்காக இந்த நேரத்தில் எங்களுடைய அண்ணன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நேரு அவர்களுக்கும், பேரன்பழகனுக்கும், இந்த சிலைக்காக பாடுபட்ட அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக திருச்சி வாழ் மக்களுக்கு எங்களுடைய குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் அப்பாவுடன் நாங்கள் மாட்டு வண்டியில் திருச்சியை சுற்றி பல இடங்களுக்கு வலம் வந்திருக்கிறோம். அந்த மாட்டு வண்டியை ஷெரீப் என்ற ஒரு பாய்தான் ஓட்டுவார். அதில் நாங்கள் திருச்சியை சுற்றி பார்த்திருக்கிறோம்.