‘சிலை வச்சதே பெரிய விஷயம் அதுக்குள்ள மணிமண்டபமா?’ - சிவாஜி சிலை திறப்பில் பிரபு எமோஷனல் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘சிலை வச்சதே பெரிய விஷயம் அதுக்குள்ள மணிமண்டபமா?’ - சிவாஜி சிலை திறப்பில் பிரபு எமோஷனல் பேச்சு!

‘சிலை வச்சதே பெரிய விஷயம் அதுக்குள்ள மணிமண்டபமா?’ - சிவாஜி சிலை திறப்பில் பிரபு எமோஷனல் பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 09, 2025 11:28 AM IST

திருச்சி வாழ் மக்களுக்கு எங்களுடைய குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் அப்பாவுடன் நாங்கள் மாட்டு வண்டியில் திருச்சியை சுற்றி பல இடங்களுக்கு வலம் வந்திருக்கிறோம். - பிரபு எமோஷனல் பேச்சு!

‘சிலை வச்சதே பெரிய விஷயம் அதுக்குள்ள மணிமண்டபமா?’ - சிவாஜி சிலை திறப்பில் பிரபு எமோஷனல் பேச்சு!
‘சிலை வச்சதே பெரிய விஷயம் அதுக்குள்ள மணிமண்டபமா?’ - சிவாஜி சிலை திறப்பில் பிரபு எமோஷனல் பேச்சு!

மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு பேசியதாவது, ‘இளம் வயதில் வாழ்ந்தது எல்லாமே திருச்சியில் தான். இங்கே அவருக்கான சிலை வைப்பது என்பது அவருடைய ஆத்மாவை சாந்தப்படுத்தும். இதற்காக இந்த நேரத்தில் எங்களுடைய அண்ணன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நேரு அவர்களுக்கும், பேரன்பழகனுக்கும், இந்த சிலைக்காக பாடுபட்ட அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக திருச்சி வாழ் மக்களுக்கு எங்களுடைய குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் அப்பாவுடன் நாங்கள் மாட்டு வண்டியில் திருச்சியை சுற்றி பல இடங்களுக்கு வலம் வந்திருக்கிறோம். அந்த மாட்டு வண்டியை ஷெரீப் என்ற ஒரு பாய்தான் ஓட்டுவார். அதில் நாங்கள் திருச்சியை சுற்றி பார்த்திருக்கிறோம்.

அப்பாவின் மிகப்பெரிய ரசிகர்

அப்படிப்பட்ட ஊரில் இன்று அப்பாவிற்கு இப்படியான சிலை வைத்திருப்பது என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். நீண்ட வருடங்களாக இப்படி ஒரு சிலை வைக்க வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாக இருக்கிறது. முதலில் நேரு அண்ணன் சிலை வைப்பதற்கான வேலையில் இறங்கி, பின்னால் அது முடியாமல் போனது. இப்போது இந்த சிலை இங்கே வந்திருக்கிறது; இதற்கு முக்கிய காரணம் நேரு. முதலமைச்சரவர்கள் அப்பாவின் மிகப்பெரிய ரசிகர்.

அப்போது செய்தியாளர்கள் இங்கே மணிமண்டபம் வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேட்டார்கள் அதற்கு பதில் அளித்த பிரபு இப்படிப்பட்ட சிலையை இங்கே வைத்ததே மிகப்பெரிய விஷயம். வரும் காலத்தில் அது வைக்கப்படும் என்று நம்புகிறேன். அப்படி வைத்தால் அது அண்ணன் நேருவாளும் முதலமைச்சராகும் மட்டும்தான் வைக்க முடியும். முதலமைச்சர் ஸ்டாலின் எப்பொழுதுமே அப்பாவிற்காக குரல் கொடுக்கக் கூடியவர்; குரல் கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக திகழ்ந்தவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன். இவருக்கு கடந்த 2009 -ம் ஆண்டு திருச்சியில் சிலை அமைக்க, திமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு 9 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் சிவாஜியின் சிலை திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

சிலை வைக்கப்பட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அது அரசால் திறந்து வைக்கப்படாமல் இருந்த நிலையில், உடனடியாக சிவாஜி சிலையை திறந்து வைக்க வேண்டும் என சிவாஜியின் குடும்பத்தினர், ரசிகர்கள், தொடர்ந்து வலியுறுத்தினர்.

இது தொடர்பாக, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு ‘சிவாஜியின் சிலை விரைவில் திறக்கப்படும்’ என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது சிலை திறக்கப்பட்டு இருந்தது.