‘அப்பா கூட நன்கு பழகுற மாதிரி பழகி கீழே தள்ளிட்டு பெரிய ஆள் ஆகியிருக்காங்க’: நடிகர் பாண்டியனின் மகன் ரகு பேட்டி
நடிகர் பாண்டியன் மகனின் பேட்டி: மண்வாசனை படம் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் பாண்டியன். அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின், அவரது ஒரே மகன் ரகு பாண்டியன் எமோஷனலாகப் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் பாண்டியனின் மகன் பேட்டி: மண்வாசனை, ஆண் பாவம், கிழக்குச்சீமையிலே ஆகியப் படங்களில் நடித்து பெரியளவில் அதிர்வான ஹீரோவாக வலம் வந்தவர், நடிகர் பாண்டியன். 2008ஆம் ஆண்டு உயிரிழந்த அவருக்கு ரகு என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில் ரகு பாண்டியன் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி, 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது. அவற்றின் தொகுப்பினைக் காணலாம்.
’மண்சார்ந்த படங்கள் என்றாலே பாண்டியன் சார் நல்ல ரோலில் நடித்திருப்பாங்க. அவருடைய கேரியர் எங்கு தொடங்குச்சு?
அப்பா பாண்டியன் மதுரை ஜெயராஜ் நாடார் ஸ்கூலில் 10ஆவது வரை படிச்சார். அந்த ஸ்கூலில் இவர் வந்து பெரிய சண்டியர் மாதிரி இருந்திருக்கார். ஒரு புரூஸ்லி மாதிரி இருந்தார். துறுதுறுன்னு இருந்திருக்கார். அதற்கப்புறம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வளையல் வியாபாரம் பார்த்திட்டு இருந்தார். வார கலெக்ஷனுக்கு அப்பா போகும்போது, பாரதிராஜா சார் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரினசம் செய்ய வந்திருக்கார். அவரை நம்ம கடைக்குக் கூட்டிட்டு வான்னு, எங்கப்பாவுடைய சித்தப்பா தனபால் சொல்லியிருக்கார்.
