ரஜினியின் ஜெயிலர் 2வில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ்.. 20 நாள் ஷூட்டிங்கிற்கு 50 கோடி கேட்ட நடிகர்! யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரஜினியின் ஜெயிலர் 2வில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ்.. 20 நாள் ஷூட்டிங்கிற்கு 50 கோடி கேட்ட நடிகர்! யார் தெரியுமா?

ரஜினியின் ஜெயிலர் 2வில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ்.. 20 நாள் ஷூட்டிங்கிற்கு 50 கோடி கேட்ட நடிகர்! யார் தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Published May 11, 2025 06:28 AM IST

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அதற்காக அவர் எவ்வளவு பணம் பெற்றுள்ளார் என்பது தெரியுமா? அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

ரஜினியின் ஜெயிலர் 2வில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ்.. 20 நிமிஷ சீனுக்கு 50 கோடி கேட்ட நடிகர்! யார் தெரியுமா?
ரஜினியின் ஜெயிலர் 2வில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ்.. 20 நிமிஷ சீனுக்கு 50 கோடி கேட்ட நடிகர்! யார் தெரியுமா?

ஜெயிலர் 2 -பாலகிருஷ்ணாவின் மெகா பட்ஜெட்

ஜெயிலர் 2 படத்திற்கு பாலகிருஷ்ணா 20 நாட்கள் ஷெட்யூல் ஒதுக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் படப்பிடிப்புக்காக தனக்கு ரூ.50 கோடி தருமாறு தயாரிப்பாளர்களிடம் அவர் கேட்டார், அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர் என இந்தியா கிளிட்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

அத்துடன், இந்த தொகைக்கு ஒப்புக்கொள்வதில் தயாரிப்பாளர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியில் சிவ ராஜ்குமார் ஒரு கேமியோவுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது கூறுகிறது.

வெயிட்டான ரோல்

முன்னதாக, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார் என்பதை படத்தின் யூனிட்டுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் உறுதிப்படுத்தியதாக இந்துஸ்தான் டைம்ஸ் முன்பு செய்தி வெளியிட்டது. "ஜெயிலர் 2 படத்தில் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்திற்கு நந்தமுரி பால கிருஷ்ணா ஓகே என்று சொன்னது உண்மைதான். நெல்சன் தனக்கு வழங்கிய கதாப்பாத்திரத்தை அவர் விரும்பினார்.

பால கிருஷ்ணா விரைவில் படத்தின் படப்பிடிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அவர் ஒரு கௌரவ வேடத்தை விட படத்தில் ஒரு விருந்தினர் பாத்திரத்தில் நடிக்கிறார், ஏனென்றால் அவர் திடமான ஒரு ரோலை தான் செய்ய விரும்பினார். அதனை படத்தில் நெல்சனும் வழங்கினார். ரசிகர்கள் அதை விரும்புவார்கள்" என்று அவர்கள் கூறினர்.

நெல்சனின் விருப்பம்

நெல்சன் 2023 ஆம் ஆண்டில் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை ஜெயிலரில் நடிக்க வைக்க விரும்புவதாக வெளிப்படையாக கூறினார். "பாலகிருஷ்ணா சார் என் மனதில் இருந்தார், ஆனால் என்னால் அவரது கதாபாத்திரத்தை சரியாக வடிவமைத்து ஸ்கிரிப்டில் பொருத்த முடியவில்லை. அதனால்தான் அதை விட்டுவிட்டேன். ஜெயிலர் 2 படத்தில் நான் நினைத்த கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணா நடித்தால் அது பவர்ஃபுல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ஜெயிலர் 2 படம்

ரஜினிகாந்த் 'டைகர்' முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற ஜெயிலராகவும் மற்றும் ரம்யா கிருஷ்ணன் அவரது மனைவி விஜயாவாகவும் நடித்துள்ளனர். அவர்களின் மருமகளாக மிர்னா மேனனும், டாக்ஸி டிரைவராக யோகி பாபுவும், சிவ ராஜ்குமார், மோகன்லால் ஆகிோரும் முதல் படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார், அதன் தொடர்ச்சியாக தற்போது தயாராகிவரும் 2 ஆம் பாகத்தில் இவர்கள் அனைவரும் இருப்பார்களா என்பது படம் வெளியான பின் தான் தெரியும்.