Naga Chaitanya- sobhita: விசாகா ராணியுடன் பண்டிகையை வைப் செய்த சைதன்யா.. வைரலாகும் புகைப்படங்கள்..
Naga Chaitanya- sobhita: நடிகர் நாக சைதன்யா- சோபிதா துலிபாலா தம்பதியினர் திருமணத்திற்கு பின் தங்களது முதல் சங்கராந்தி பண்டிகையை கொண்டாடினர்.

Naga Chaitanya- sobhita: நட்சத்திர தம்பதிகளான சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா கடந்த டிசம்பர் 4ம் தேதி பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தற்போது தங்கள் முதல் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்ட புகைப்படங்களை அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர்.
பொங்கல் கொண்டாட்டம்
சோபிதாவும் நாக சைதன்யாவும் தங்கள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியினை புகைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தனர். ஷோபிதா ஷேர் செய்த புகைப்படங்களில் போகி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு நெருப்பின் படத்தைப் பகிர்ந்துள்ளார். "போகி, புதுப்பித்தல், மாற்றம்" என்று குறிப்பிட்டு இந்தப் படங்களை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், தென்னிந்தியாவின் பாரம்பரிய கோலத்தின் படத்தை அவர் பகிர்ந்து, "இனிய சங்கராந்தி. இனிய பொங்கல் என சிவப்பு இதய ஈமோஜியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.